சிறுவனை கடித்த வெறி நாயுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டு காப்பாற்றிய பெண் - வைரல் வீடியோ
சிறுவனை கடித்த நாயுடன் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார் ஒரு பெண், இது பற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Recommended Video

டெல்லி: டெல்லியில் உத்தம் நகர் பகுதியில் தெருவில் உட்கார்ந்திருந்த குழந்தைகளை நாய் ஒன்று விரட்டி கடித்தது, சிறுவனை காப்பாற்ற பெண்கள் தெருவில் நாயுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட வீடியோ காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டின் முன்பாக தெருவில் குழந்தைகள் சிலர் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த தெருவில் ஓடி வந்த கருப்பு நிற நாய் ஒன்று அங்கிருந்த குழந்தைகளை விரட்டி கடிக்க ஆரம்பித்தது.

இதில் சில குழந்தைகள் அலறி அடித்துக்கொண்டு தப்பி ஓடினர். ஒரு சிறுவன் மட்டும் கீழே விழுந்து அந்த நாயிடம் மாட்டிக் கொண்டான். அவனை அந்த நாய் கை மற்றும் கால்களை விடாமல் கடித்த படி இருந்தது. அதைப் பார்த்த இளைஞர்கள் சிலர் அந்த சிறுவனை காப்பாற்ற முன்வரவில்லை.
ஆனால் பெண் ஒருவர் தைரியமாக களமிறங்கினார். சிறுவனை காப்பாற்றுவதற்காக நாயிடம் போராடினார். தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டார். எனினும் சிறுவனை விடாமல் நாய் கடித்த படியே இருந்ததால், இன்னொரு பெண் கையில் கட்டை ஒன்றை எடுத்து வந்து நாயை அடித்து விரட்டினார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் சேரை எடுத்து நாய் மீது வீசவே, சிறுவனை விட்ட நாய் சேரால் அடித்தவரை விரட்ட ஆரம்பித்தது.
இதில் சிறுவனுக்கும் அவனை காப்பாற்ற போராடிய பெண் உட்பட 3 மூன்று பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications