கடவுளையும், அரசையும் நம்பி இருக்காதீர்கள்: விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் கட்காரி அறிவுரை
அமராவதி: கடவுளையும், அரசையும் நம்பியிருப்பதை முதலில் நிறுத்துங்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த க்ரிஷி விகாஸ் கண்காட்சியின் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

நிகழ்ச்சியில் கட்காரி கூறியதாவது,
கடவுளையும், அரசையுமே நம்பி இருக்காதீர்கள். விவசாயிகள் தங்களை நிலைமையை மேம்படுத்த புதிய முயற்சிகள் எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வடிவமைக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் உங்களின் சமூக வாழ்க்கையை நீங்களே மாற்ற முடியும்.
விளைச்சல் இல்லாதபோதிலும் மனமுடைந்துவிடாதீர்கள். விதர்பா விவசாயிகளுக்காகவே இந்த விவசாய கண்காட்சி நடத்தப்படுகிறது. நிபுணர்களிடம் பேசி புதிய தொழில்நுட்பங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
புதிய தொழில்நுட்பத்தின் தேவையை விதர்பா விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனையில் இருந்தாலும் சோர்ந்துவிடக் கூடாது. பிரச்சனைகளில் இருந்து வெளியே வர வழி தேட வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications