நாளைக்கு இதை பெரிய்ய நியூஸா போடுவீங்களே?: செய்தியாளர்களிடம் சீறிய ஜெயபிரதா
ஹைதராபாத்: நடிகை ஜெயபிரதா ஹைதரபாத்தில் தனது காரை நிறுத்திய போலீசார் மற்றும் செய்தியாளர்களிடம் கோபப்பட்டுள்ளார்.
நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயபிரதா கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் காரில் சென்றுள்ளார். காரை டிரைவர் ஓட்யுள்ளார். அப்போது ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் போலீசார் வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்கள் மது அருந்தியுள்ளார்களா என்று சோதனை செய்துள்ளனர்.

அவர்கள் ஜெயபிரதாவின் காரையும் நிறுத்தி அவரது டிரைவரை சோதனை செய்தனர். இதனால் ஜெயபிரதா கோபம் அடைந்தார். கோபத்தில் அவர் போலீசாரையும், அங்கிருந்த செய்தியாளர்களையும் திட்டினார்.
என்ன தமாஷ் செய்கிறீர்கள் என்று போலீசாரையும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று மீடியாவையும் கத்தினார். நாளை காலையில் செய்தித்தாளில் புகைப்படத்துடன் இதை பெரிய செய்தியாக போடுவீர்களே என்று செய்தியாளர்களை பார்த்து கேட்டார்.
ஜெயபிரதாவின் டிரைவர் மது அருந்தவில்லை என்பது சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை அங்கிருந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications