காருக்குள்ளேயே இறந்து கிடந்த மத்திய அமைச்சரின் டிரைவர்!
டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரான பாபுல் சுப்ரியாவின் கார் டிரைவர் மர்மமான முறையில் காருக்குள்ளேயே இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நகர்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சராக இருப்பவர் பாபுல் சுப்ரியா. இவரது கார் டிரைவர் பெயர் வினோத் கந்தூரி. இவர் வழக்கம் போல கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை, அமைச்சரின் காரை டெல்லி அமைச்சர்களின் உத்யோக்பவனில் நிறுத்தினார்.

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பதற்றமடைந்த வினோத்தின் குடும்பத்தினர், துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு புகார் கொடுத்தனர்.
அதில் டிரைவர் வினோத் பணி முடிந்து வீடு திரும்பவில்லை. போன் செய்தபோது, அவர் போனை எடுக்கவில்லை. எந்தவித பதிலும் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது.
மறுநாள் காலையில் அமைச்சரின் கார் நிறுத்தப்பட்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது, அந்த காருக்குள் டிரைவர் வினோத் பிணம் கிடந்தது கண்டுபிடிக் கப்பட்டது. முதற்கட்ட மருத்துவ சோதனையில் வினோத்தின் சாவு இயற்கையான மரணம் என்பது தெரிய வந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கைக்குப்பின்னர்தான் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications