டெல்லியில் குடிபோதையில் சிறுவன் மீது காரை ஏற்றிக் கொன்ற கான்ஸ்டபிள்
டெல்லி: டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 10 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியானார்.
கிழக்கு டெல்லியைச் சேர்ந்தவர் அசோக். போலீஸ் கான்ஸ்டபிள். அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு 2 பேருடன் காரில் மந்தவாலி பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். அசோக் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்றார்.

மந்தவாலி பகுதியில் அவர் காரை ரிவர்ஸ் எடுக்கையில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுவன் கோபால் மற்றும் அவரின் பாட்டி மீது வாகனம் மோதி அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோபாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த பாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக்கை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications