Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பை புறநகர் ரயிலில் குடித்துவிட்டு நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட பெண் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை: புற நகர் ரயிலில், குடிபோதையில் இருந்த ஒரு பெண் நிர்வாணமாக சக பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இன்று காலை மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையத்துக்கு புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 8.15 மணியளவில் தானே ரயில் நிலையத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குடிபோதையில் ரயிலில் ஏறியுள்ளார். அப்போது அருகில் இருந்த இருக்கையில் அமருவதற்காக சக பயணியிடம் கேட்ட போது அவர் இடமளிக்க மறுத்துள்ளார்.

Drunk naked women creates nuisance in Mumbai Sub Urban train

இதையடுத்து கோவமடைந்த அந்த பெண் தனது ஆடைகளை கழற்றி வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மூலந்த் ரயில் நிலையத்தில் தயாராக நின்ற பெண் போலீசார் ரயில் வந்தடைந்ததும் அந்த பெண்ணை வண்டியிலிருந்து கீழே இறக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,

அந்த பெண்ணைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கிறார். நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். அவர் குடித்துவிட்டு நிதானமின்றி இருப்பதனால் அவரிடமிருந்து எந்த தகவலும் வாங்க முடியவில்லை. அவர் மீது போது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+