டெல்லியில் கொள்ளையடிக்க வந்து ஏ.டி.எம். மையத்தில் தூங்கிய 'குடி'மகன்
டெல்லி: டெல்லியில் கொள்ளையடிக்க வந்த ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையன் தூங்கியதால் போலீசில் சிக்கினார்.
டெல்லியில் உள்ள அஸ்தா விஹார் பகுதியில் இருக்கும் ஐடிபிஐ வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க 5 பேர் குடிபோதையில் கடந்த சனிக்கிழமை வந்தனர். அவர்கள் எந்திரத்தின் ஒரு பகுதியை திறந்தபோதிலும் அவர்களால் பணம் இருக்கும் இடத்தை திறக்க முடியவில்லை. அப்போது கொள்ளையர்களில் ஒருவரான தீபக்(21) பணப் பெட்டியை திறக்க கையைவிட அது எந்திரத்தில் சிக்கிக் கொண்டது.

அவரது கையை எடுக்க முயன்றும் வரவில்லை. அவர்கள் கையை இழுக்கிறேன் என்ற பெயரில் கூச்சல் போட்டனர். இதனால் நிச்சயம் போலீசார் வருவார்கள் என்று நினைத்து மற்ற 4 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
கையை எடுக்க பல முறை முயன்றும் முடியாததால் தீபக் சோர்வடைந்தார். பின்னர் தீபக் ஏ.டி.எம். மையத்திலேயே தூங்கிவிட்டார். அதிகாலை 3 மணிக்கு அந்த வழியாக வந்த பாதுகாவலர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரம் திறந்தவாறு அதன் அருகில் ஒருவர் தூங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து தீபக்கை கைது செய்து சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தீபக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சி நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை சரிபார்த்து வருகிறார்கள்.
ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளியை பணியமர்த்துமாறு கூறியும் வங்கி கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications