ஜனவரி வரை லோக்சபா தேர்தல் பற்றி பேசகூடாது.. எம்.பி.க்களுக்கு மோடி கட்டளை
டெல்லி: ஜனவரி மாதம் வரை லோக்சபா தேர்தலை பற்றி பேசக்கூடாது என்று, பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு நடைபெற வேண்டிய லோக்சபா தேர்தலை இவ்வாண்டு இறுதியிலேயே நடத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பாஜக எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, முன்கூட்டியே தேர்தல் நடைபெறாது என மோடி கூறியுள்ளார். குறைந்தபட்சம், ஜனவரி வரையிலாவது தேர்தல் பற்றி பேச வேண்டாம் என்று மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள், மத்திய அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து, ஆய்வு செய்யவும் எம்.பிக்களுக்கு மோடி கட்டளையிட்டுள்ளார். தேர்தல் பற்றி ஜனவரி வரை வெளிப்படையாக பேசுவது பாஜக தேர்தல் யுக்திகளை வெளிக்காட்டிவிடும் வாய்ப்புள்ளது என மோடி கூறியுள்ளார்.
எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் இந்த தகவல்களை 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications