ஐடிபிஐ வங்கி மோசடி.. விசாரணைக்கு ஆஜராக மல்லையாவுக்கு ஏப். 2 வரை அமலாக்கப் பிரிவு "டைம்"!
டெல்லி: ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாமல் விட்டது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய் மல்லையாவுக்கு ஏப்ரல் 2ம் தேதி வரை அமலாக்கப் பிரிவு அவகாசம் அளித்துள்ளது.
முன்னதாக, இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், நாட்டை விட்டு ஓடிப் போய் விட்ட மல்லையா, தான் நேரில் ஆஜராக கூடுத்ல் அவகாசம் தேவை என்று கோரியிருந்தார். அதை ஏற்று தற்போது அவகாசம் அளித்துள்ளது அமலாக்கப் பிரிவு.

மல்லையா மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. அதில் கடந்த ஆண்டு சிபிஐ ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ. 900 கோடியை திருப்பிச் செலுத்தாமல் மோசடிசெய்த வழக்கும் ஒன்று. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து மல்லையா உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு தற்போது பதிவு செய்துள்ளது.
சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன இயக்குநர்கள், முன்னாள் தலைமை நிதி அதிகாரி ரகுநாதன், ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடன் வழங்கும் அளவையும் தாண்டி அளவுக்கு அதிகமாக மல்லையா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுக்க சில ஐடிபிஐ வங்கி அதிகாரிகளே உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
மல்லையாவுக்கு குண்டக்க மண்டக்க கடன் தருவாங்களாம்.. அதை திரும்ப வசூலிக்க முடியலையே எனறு புலம்புவார்களாம்.. அவர் மீது கேஸ் போடுவாங்களாம். அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓடும் வரை அமைதியா இருப்பாங்களாம்.. அதன் பிறகு சம்மன் அனுப்புவாங்களாம்.. அதற்கு அவர் டைம் கேட்பாராம்.. அதையும் கொடுப்பாங்களாம்.. சூப்பரப்பு!
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications