ஐடிபிஐ வங்கி மோசடி.. விசாரணைக்கு ஆஜராக மல்லையாவுக்கு ஏப். 2 வரை அமலாக்கப் பிரிவு "டைம்"!
டெல்லி: ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாமல் விட்டது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய் மல்லையாவுக்கு ஏப்ரல் 2ம் தேதி வரை அமலாக்கப் பிரிவு அவகாசம் அளித்துள்ளது.
முன்னதாக, இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், நாட்டை விட்டு ஓடிப் போய் விட்ட மல்லையா, தான் நேரில் ஆஜராக கூடுத்ல் அவகாசம் தேவை என்று கோரியிருந்தார். அதை ஏற்று தற்போது அவகாசம் அளித்துள்ளது அமலாக்கப் பிரிவு.

மல்லையா மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. அதில் கடந்த ஆண்டு சிபிஐ ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ. 900 கோடியை திருப்பிச் செலுத்தாமல் மோசடிசெய்த வழக்கும் ஒன்று. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து மல்லையா உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு தற்போது பதிவு செய்துள்ளது.
சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன இயக்குநர்கள், முன்னாள் தலைமை நிதி அதிகாரி ரகுநாதன், ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடன் வழங்கும் அளவையும் தாண்டி அளவுக்கு அதிகமாக மல்லையா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுக்க சில ஐடிபிஐ வங்கி அதிகாரிகளே உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
மல்லையாவுக்கு குண்டக்க மண்டக்க கடன் தருவாங்களாம்.. அதை திரும்ப வசூலிக்க முடியலையே எனறு புலம்புவார்களாம்.. அவர் மீது கேஸ் போடுவாங்களாம். அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓடும் வரை அமைதியா இருப்பாங்களாம்.. அதன் பிறகு சம்மன் அனுப்புவாங்களாம்.. அதற்கு அவர் டைம் கேட்பாராம்.. அதையும் கொடுப்பாங்களாம்.. சூப்பரப்பு!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications