லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தயார்: தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா மற்றும் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு 6 மாதங்களுக்கு முன்னர் பரிந்துரை செய்திருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் சட்ட அமைச்சகம் இது தொடர்பாக கருத்து கேட்டது.

Election Commission

இதற்கு தற்போது பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், லோக்சபா மற்றும் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தயார்; அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் நிதிச் சுமை, கட்டமைப்பும் தேவை என கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல்களை நடத்துவதுதான் வாக்காளர்களுக்கு வசதியானதாக இருக்கும் என கருதுகிறது. கடந்த டிசம்பர் மாதம் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியும் இந்த கருத்தை கூறியிருந்தார்.

முன்னதாக 2014 லோக்சபா தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் கூட இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் ஆணையமும் ஒப்புதல் தெரிவித்திருப்பதால் லோக்சபா தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+