திரண்டு வந்த பாஜக தொண்டர்கள்.. மிரண்டுபோன பசுமாடுகள்! பாஜக முன்னாள் துணை முதல்வருக்கு மோசமான காயம்
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் பாஜக முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் கலந்து கொண்ட பேரணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு உடன் 75 ஆண்டுகள் முடிகிறது. இதை மத்திய அரசு மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முக்கிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

75ஆவது சுதந்திர தின விழா
இந்த 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள அனைவரின் வீடுகளில் தேசியக் கொடிகளை மக்கள் ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

தேசியக் கொடிகள்
முன்னதாக இந்தியாவில் இருந்த சட்டத்தின்படி சூரியன் அஸ்தமித்த பிறகு தேசிய கொடியை இறக்கிவிட வேண்டும். இந்நிலையில், அனைவரும் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்ற வழிவகை செய்யும் வகையில், சட்டத் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது. மேலும், தேசியக் கொடியை எப்படி மடிக்க வேண்டும், எப்படிச் சரியான முறையில் கொடியை ஏற்ற வேண்டும் என்பது குறித்தும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருந்தது.

குஜராத்
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் பல கோடி மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளனர். அதேபோல பாஜக சார்பிலும் நாடு முழுக்க பல்வேறு தேசியக் கொடிகளை ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் ஹர் கர் திரங்கா என்ற பெயரில் மாபெரும் பேரணிகள் நடைபெற்று வருகிறது. பல மாநில முக்கிய பாஜக தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் துணை முதல்வர்
அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஹர் கர் திரங்கா பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் குஜராத் மாநில பாஜக முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் கலந்து கொண்டார். மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள காடி பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தாக்குதல்
திடீரென அத்தனை கூட்டம் திரண்டதால் அந்தச் சமயம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்குத் தெருக்களில் சுற்றிக் கொண்டு இருந்த மாடுகள் மிரண்டுபோய்விட்டன. தெருவோர மாடுகள் மிரண்டு ஓடியதில் அங்குக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது சில நாடுகள் நிதின் படேலையும் முட்டியுள்ளன. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

முதலுதவி
இதையடுத்து அங்கேயே அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பாஜக சார்பில் எம்எல்ஏவாக உள்ளவர் நிதின் பட்டேல். இவர் விஜய் ரூபானி முதல்வராக இருந்த சமயத்தில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை குஜராத் துணை முதல்வராகவும் இருந்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications