உ.பி.யில் சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
ஹௌரா- ஜபல்பூர் இடையே செல்லும் சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் ஓப்ராவில் சோன்பத்ரா என்ற இடத்தில் தடம்புரண்டன. இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பும் உ.பி.யிலும், தமிழகத்தின் விழுப்புரத்திலும் அடுத்தடுத்து ரயில் விபத்து நிகழ்ந்தன.
இதற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில்வே துறையின் புதிய அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications