டெல்லி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருகிறது: வீடு திரும்ப விவசாயிகள் முடிவு
ஓராண்டுக்கு மேலாக டெல்லிக்கு வரும் சாலைகளை மறித்து நடத்தி வரும் போராட்டத்தை தற்போதைக்கு முடித்துக்கொள்ள விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபோதும், நாடாளுமன்றத்தில் அவற்றை முறைப்படி திரும்பப் பெறும் நடைமுறையை நிறைவேற்றும்வரை காத்திருப்போம் என்று டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
- விவசாயிகள் போராட்டம்: ஒவைசியை தாக்கும் திகைத், தேர்தலை முன்னிட்டு இயக்கத்தில் பிளவா?
- நரேந்திர மோதியின் பிம்பத்துக்கும் வேளாண் சீர்திருத்தத்துக்கும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்ன?
இன்று வியாழக்கிழமை சிங்கு எல்லைப் பகுதியில் நடந்த சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் இயக்கம்) தலைவர்களின் கூட்டத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முடிவு எடுக்கப்பட்டது.
தங்கள் இயக்கத்தை இடை நிறுத்துவதாகவும், போராடும் விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அரசு அளித்த வாக்குறுதியை ஏற்பதாகவும், டெல்லி எல்லைகளில் இருந்து வீடு திரும்புவதாகவும் விவசாயிகள் தலைவர்கள் முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.
முக்கியமாக மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு பஞ்சாபில் தொடங்கிய இந்தப் போராட்டம், 2020 நவம்பர் மாதம் டெல்லிக்கு இடம் பெயர்ந்தது.
டெல்லிக்கு வரும் சாலைகளை மறித்து சிங்கு, டிக்ரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நிரந்தரமாக அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்தப் போராட்டக் களத்தில் பல்வேறு காரணங்களால் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர் என்கிறார்கள் போராட்டத்தை நடத்தும் விவசாயிகள்.
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தின் மீது மத்திய அமைச்சர் மகன் தொடர்புடைய கார் விட்டு ஏற்றப்பட்டதில் விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோதி கடந்த மாதம் அறிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டு குடியரசுத் தலைவர் கையொப்பம் இட்டபிறகுதான் போராட்டத்தை முடித்துக்கொள்ள முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
அத்துடன், வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்கவேண்டும், அது தொடர்பாகப் பேசவேண்டும். அதன் பிறகே போராட்டம் முடிவுக்கு வரும் என்று அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது போராட்டத்தை இடை நிறுத்துவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
பிற செய்திகள்:
- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய க்ரூப் கேப்டன் வருண் சிங்கின் பின்னணி
- ஒமிக்ரான் திரிபு: எவ்வளவு பெரிய ஆபத்து? எவ்வளவு வேகமாகப் பரவுகிறது?
- ஜமால் கஷோக்ஜி கொலை: சௌதியின் முன்னாள் அரச காவலர் பிரான்சில் கைது
- ரூ. 4.05 லட்சம் கோடி மதிப்பிலான பிட்காயின் ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு சொந்தமானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications