திருமணமான மகளுக்கு தந்தை தனது சொத்தை அளிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருமணமான மகளுக்கு தந்தை தனது சொத்தை அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பிஸ்வ ரஞ்சன் சென்குப்தா. கொல்கத்தா சால்ட்லேக் சிட்டியில் உள்ள புர்பாஞ்சல் ஹவுஸிங் எஸ்டேட்டில் சென்குப்தாவுக்கு சொந்தமான ஃபிளாட் உள்ளது. அவரது கடைசி காலத்தில் மனைவியும், மகனும் மதிக்காததால் அவர் திருமணமான தனது மகள் இந்திராணி வாஹியிடன் வீட்டில் வசித்து வந்தார். உயிர் இழக்கும் முன்பு அவர் தனது ஃபிளாட்டை இந்திராணிக்கு அளிக்குமாறு கூறியுள்ளார்.

Father can give property to married daughter, Supreme Court says

மேற்கு வங்க கூட்டுறவு சங்க விதிகளின் படி ஃபிளாட் உரிமையாளர் அதை தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தான் அளிக்க முடியும். (திருமணம் ஆனதால் இந்திராணி வேறு வீட்டு பெண்ணாகிவிட்டார்). இந்த விதிமுறையை எடுத்துக்கூறி ஃபிளாட்டை இந்திராணிக்கு அளிக்க சென்குப்தாவின் மனைவியும், மகனும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஃபிளாட்டை இந்திராணியின் பெயருக்கு மாற்ற கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மறுத்துவிட்டார். இதை எதிர்த்து இந்திராணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இருந்த ஒரு நீதிபதி ஃபிளாட்டை இந்திராணியின் பெயருக்கு மாற்ற அனுமதி அளித்தார். ஆனால் மற்ற நீதிபதிகள் அனுமதி அளிக்கவில்லை.

இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திராணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்திராணி திருமணமாகி வேறு வீட்டிற்கு சென்றாலும் அவரும் சென்குப்தா குடும்பத்தை சேர்ந்தவர் தான். அதனால் ஃபிளாட்டை தாராளாக இந்திராணியின் பெயருக்கு மாற்றலாம்.

ஒரு தந்தை தனது சொத்தை திருமணமான மகளுக்கு அளிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+