நல்லா கொண்டாடுனீங்களா.. கனடா பிரதமரை கமல் ஸ்டைலில் கட்டிப்பிடித்து வரவேற்ற மோடி!
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்து இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்து இருக்கிறார். 8 நாள் பயணத்தில் இவ்வளவு நாட்கள் கழித்து இப்போதுதான் அவர் இந்திய பிரதமரால் வரவேற்கப்பட்டு இருக்கிறார்.
டிவிட்டரில் கூட பிரதமர் மோடி ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. சரியாக சொல்லவேண்டும் என்றால் கேபினெட் மத்திய அமைச்சர் கூட அவரை சென்று பார்க்கவில்லை. இணையமைச்சர் ஒருவர் மட்டும் அவரை சென்று வரவேற்றார்.
இது பெரிய அளவிற்கு பிரச்சனையை உருவாக்கியது. உலக அளவில் இதற்கு கண்டனங்கள் எழுந்தது.

காரணம்
சீக்கிய புரட்சி அமைப்புகளுக்கு கனடா ஆதரவு அளித்து வருகிறது. சீக்கியர்களின் காலிஸ்தான் கோரிக்கைக்கும் கனடா ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல் பாஜகவிற்கு நெருக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு கனடா இயக்கங்கள் எதிராக இருக்கிறது.

சந்திப்பு
இதனால் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வரவேற்பு அளிக்கப்படவில்லை. இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ ''நான் வரவேற்பை எதிர்பார்த்து இங்கு வரவில்லை. என்னை யாரும் கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்று மோடியின் செயலை கிண்டல் செய்து கூட பேசி இருந்தார்.
|
மோடி டிவிட்
இதுகுறித்து மோடி தனது டிவிட்டரில் ''இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றாக கொண்டாடி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவரின் குழந்தைகளை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். இது 2015ல் நான் கனடா போன போது எடுக்கப்பட்ட புகைப்படம்'' என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மோடி சந்தித்தார்
இந்த நிலையில் பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மோடி ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அவர் குடும்பத்தையும் மோடி வரவேற்றார்.

பேச்சு வார்த்தை
இன்று இவர்கள் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். காலநிலை மாற்றம், ஸ்பேஸ் தொழில்நுட்பம், ராணுவ உதவி குறித்து பேச உள்ளனர். ஆனால் இதில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

சீக்கியர்கள்
அதேபோல் இதில் முக்கியமாக சீக்கியர்கள் பிரச்சனை குறித்தும் பேசப்பட இருக்கிறது. காலிஸ்தான் குறித்த இந்திய நிலைப்பாட்டை மோடி அறிவிப்பார். மேலும் சீக்கிய போராளிகளுக்கு கனடா ஆதரவு அழிப்பது குறித்தும் மோடி பேச இருக்கிறார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications