பட்ஜெட் ரெடி...அல்வா கிண்டி பிரிண்டிங்கை தொடங்கி வைத்தார் அருண் ஜேட்லி
டெல்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட் உரை) பிரதி எடுக்கும் பணியை நேற்று பாரம்பரிய முறைப்படி அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி துவங்குகிறது. 25ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் , 29ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட் பிரிண்டிங் செய்யும் பணியை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது கையால் அல்வாவைக் கிண்டி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நாடளுமன்ற வடக்கு பிளாக் கட்டிடத்தில் மூடிய அறைக்குள் பட்ஜெட்டை பிரதியெடுக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாகியுள்ளனர். மிக ரகசியமாக தயாரிக்கப்படும் பட்ஜெட் ஆவணங்கள் பாதாள அறையில் தயார் செய்யப்படும். பட்ஜெட் உரை பிரதி எடுக்கும் வரை அந்த பகுதி உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த முடியாது, தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் முடியாது. அந்த பகுதி முழுவதும் செல்போன்களை செயல் இழக்க செய்யும் அதி நவீன ஜாமர் கருவிகளும் பொறுத்தப்பட்டு இருக்கும்
பிப்ரவரி 29ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் வரை இவர்கள் யாரும் வெளியில் வர முடியாது. நிதியமைச்சக செயலர் மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுவார்.
மொத்தம் 2500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பட்ஜெட் தாக்கல் அன்று மத்திய போலீஸ் பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் வரப்படும். பட்ஜெட் பிரதி எடுக்கும் பணிக்கு முன்பாக அல்வா தயாரித்து அதை அனைவரும் சாப்பிடுவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதுதான் நேற்று நடந்தது.












Click it and Unblock the Notifications