சொந்த காசில் சென்றுதான் பேரிடர் காலத்தில் உயிர்களை காப்பாற்றுகிறேன்.. இது என் கடமை.. மீனவர் ஜெய்சன்
Recommended Video

மலப்புரம்: சொந்த காசில் சென்றுதான் பேரிடர் காலங்களில் உயிர்களை காப்பாற்றுகிறேன். இது என் கடமை என்று கேரளா மீனவர் ஜெய்சன் கூறியுள்ளார்.
கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது முப்படை வீரர்களுடன் மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவ்வாறு மீட்பு பணிகளின் போது ஜெய்சன் என்ற 30 வயது மீனவ இளைஞர் பெண்களுக்காக தனது முதுகை படிக்கட்டாக மாற்றிய தருணம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
இவர் தனூர் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள பெண்கள் மீட்பு படகில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து சற்று யோசிக்காமல் ஜெய்சன் படகிற்கு பக்கத்தில் படுத்து கொண்டு தனது முதுகை படிக்கட்டாக மாற்றினார்.

எனது பணியின் ஒரு பகுதி இது
இதுகுறித்து அவர் மலையாள சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண்களால் படகில் ஏற முடியவில்லை. படகு ஆடி வந்ததால் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து நான் கீழே படுத்து அவர்களுக்கு ஏற உதவினேன். இதை எனது வேலையாகவே கருதுகிறேன். இதை பெரிதாக எடுக்கவில்லை. எனது பணியில் ஒரு பகுதிதான்.

உயரமான இடத்தில்
மாதவிடாய் காலத்தில் இருந்த பெண் ஒருவர் முகாமில் இருப்பதாக ஏற்கனவே எங்க கிட்ட சொல்லி இருந்தார்கள். அந்த காலகட்டத்தில் பெண்களால் உயரமான இடத்தில் கால் வைத்து ஏற முடியாது.

முதுகை படிக்கட்டாக...
இதை எங்களுக்கு கேம்ப்ல சொல்லி கொடுத்து இருக்காங்க. அதனால்,
அத்தனை மக்களுக்கு மத்தியில் அவங்க என் மேலே ஏறியாது போகட்டும்ன்னுதான் என் முதுகை படிக்கட்டாக மாற்றினேன்.

மலப்புரம் கேம்ப்
அங்க ஒரு படி இருந்தது, அதுல ஏறினா வழுக்கும். முதல்ல அதுல ஏற சொல்லலாம்னு இருந்தோம். ஆனால் வழுக்கும்னு நான்தான் தானா குனிச்சிக்கிறேன்ன்னு சொன்னேன், எனக்கு மலப்புரம் கேம்ப்ல இதுக்கு டிரைனிங் கொடுத்து இருக்காங்க.

காலையில் போவேன்
வீட்டுல இதை பத்தி எடுத்து சொல்ல வேண்டிய நிலை இல்லை. கேரளாவில் அப்படித்தான் இருக்கும். நான் எப்போதும் காலைல போயிட்டு ராத்திரி வருவேன். இதுதான் என் வேலை. இதுல எனக்கு சம்பளம் கிடையாது. என்னோட சொந்த பணத்தை வச்சுதான் பெட்ரோல் போட்டு இப்படி உதவி இருக்கேன். இதுல எனக்கு எந்த வருமானமும் இல்லை என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications