பீகார் சட்டசபை தேர்தல்: அக்.12 முதல் நவ.5 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவு- நவ. 8-ல் வாக்கு எண்ணிக்கை!
டெல்லி: பீகார் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி அறிவித்துள்ளார். இந்த வாக்குகள் அனைத்தும் நவம்பர் 8--ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் கடந்த 2010ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவும் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து ஆட்சியை அமைத்தது. ஆனால் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது இந்த கூட்டணி முறிந்தது.

இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. இம்மாநிலத்தின் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக அக்டோபர் 12-ந் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையாளர் நஜிம் ஜைதி அறிவித்துள்ளார்.
Live: #BiharElections Announced Date of Counting of Votes: 8th Nov 2015: CEChttps://t.co/EqNb3gZ43J pic.twitter.com/2E0Ajj12ze
— PIB India (@PIB_India) September 9, 2015 டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகளில் 6.68 கோடி பேர் வாக்காளர்கள். இம்மாநிலத்தில் முதல் முறையாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும்.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 47 தொகுதிகளில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் துணை ராணுவம் பாதுகாப்புக்கு நிறுத்தப்படும்.
5 phases for #BiharElections; First phase of polling to begin on 12 Oct 2015: CEC
— PIB India (@PIB_India) September 9, 2015 இம்மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே நடைமுறைக்கு வருகின்றன.
முதல் கட்டமாக அக்டோபர் 12-ந் தேதியன்று 49 தொகுதிகளுக்கும்
2வது கட்டமாக அக்ட்போபர் 16-ந் தேதியன்று 32 தொகுதிகளுக்கும்
3வது கட்டமாக அக்டோபர் 28-ந் தேதியன்று 50 தொகுதிகளுக்கும்
4வது கட்டமாக நவம்பர் 1-ந் தேதியன்று 55 தொகுதிகளுக்கும்
5வது கட்டமாக நவம்பர் 5-ந் தேதியன்று 57 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.
LIVE: #BiharElections Announced49 Constituencies in Phase 132 in Phase 250 in Phase 355 in Phase 457 in Phase 5
— PIB India (@PIB_India) September 9, 2015 இந்த வாக்குகள் அனைத்தும் நவம்பர் 8-ந் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு நஜிம் ஜைதி தெரிவித்தார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications