ரூ. 950 கோடி கால்நடை தீவன வழக்கு: நிதிஷ் குமாருக்கு எதிராக ஆதாரம் இல்லை- சிபிஐ

Subscribe to Oneindia Tamil

CBI
ராஞ்சி: ரூ950 கோடி கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய ரூ.950 கோடி ஊழல் வழக்கில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக கீழ் நீதிமன்றங்களில் புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது புகாரின்மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மிதிலேஷ் குமார் சிங் என்பவர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இப் புகார் தொடர்பாக தங்கள் வசம் ஏதும் ஆதாரம் உள்ளதா? என பிரதிவாதியான சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமது புகாருக்கான ஆதாரங்களை மனுதாரர் டிசம்பர் 13ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆர்.ஆர். பிரசாத் கடந்த செப்டம்பர் மாதம் 20ந் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், போதிய ஆதாரம் இல்லாததால் மனுதாரரின் வழக்கை கீழ் நீதிமன்றங்கள் பலமுறை தள்ளுபடி செய்துள்ளன.

நிதிஷ் குமாரை கால்நடை தீவன வழக்கில் குற்றவாளியாக சேர்க்க எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+