இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் மார்ச் 3-ந் தேதி பாகிஸ்தான் பயணம்!
டெல்லி: இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெய்சங்கர் மார்ச் 3-ந் தேதியன்று பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி பாகிஸ்தான் உள்பட சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவை வலுப்படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சார்க் பயணம் மேற்கொள்வார் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி, வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு செல்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் தஸ்னியா அஸ்லாம், இந்திய பிரதமர் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் பாகிஸ்தானுக்கு வரும் மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.
இருப்பினும் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரச்சினைகள் குறித்தும் இந்த பயணத்தின் போது விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications