இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் மார்ச் 3-ந் தேதி பாகிஸ்தான் பயணம்!
டெல்லி: இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெய்சங்கர் மார்ச் 3-ந் தேதியன்று பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி பாகிஸ்தான் உள்பட சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவை வலுப்படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சார்க் பயணம் மேற்கொள்வார் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி, வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு செல்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் தஸ்னியா அஸ்லாம், இந்திய பிரதமர் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் பாகிஸ்தானுக்கு வரும் மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.
இருப்பினும் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரச்சினைகள் குறித்தும் இந்த பயணத்தின் போது விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications