"ஆஹா.. இதுவல்லவா போலீஸ்" காவல்துறை வேனில் அமர்ந்து.. கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி
தானே: மகாராஷ்டிராவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீஸ் வேனில் அமர்ந்தபடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
Recommended Video
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் ரோஷன் ஜா (33). பிரபல ரவுடியான இவர் மீது தானே மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. பல வழக்குகள் இருப்பதால் சிறைக்கு சென்று வருவது ரோஷனுக்கு வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் உல்ஹாஸ் நகரில் தொழிலதிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ரோஷன் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக ரோஷனை போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றனர். பின்னர் விசாரணைக் கைதியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழலில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிறையில் இருந்து ரோஷனை போலீஸார் வேனில் நேற்று அழைத்துச் சென்றனர். சிறையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் அங்கு வந்த கார் ஒன்று வேனை வழிமறித்து நின்றது. பின்னர் அதில் இருந்து இறங்கிய 5 பேர் கேக்கை கையில் ஏந்தியபடி ரோஷனை வாழ்த்தி பிறந்தநாள் பாடலை பாடினர். தொடர்ந்து, ரோஷன் கையில் அவர்கள் கத்தியை கொடுக்க, அதனை எடுத்து போலீஸ் வேனின் ஜன்னல் வழியாக அவர் கேக்கை வெட்டி தனது கூட்டாளிகளுக்கு ஊட்டிவிட்டார். இவை அனைத்தையும் வேனில் இருந்த போலீஸார் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.
மேலும், இதனை வீடியோவாகவும் எடுத்த அந்த ரவுடிகள், சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிக்கு போலீஸார் கொடுக்கும் மரியாதையை, பொதுமக்களுக்கு ஏன் கொடுப்பதில்லை நெட்டீசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ ஆயிரக்கணக்கானோரால் ஷேர் செய்யப்பட்டும், மகாராஷ்டிரா முதல்வர், அமைச்சர்கள், காவல் உயரதிகாரிகளுக்கும் 'டேக்' செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி சம்பவம்
முன்னதாக, டெல்லியில் உள்ள ஒரு சிறையில் ரவுடி ஒருவரின் பிறந்தநாளை ஒட்டி பிரியாணி, மதுபானங்களுடன் தடபுடலாக விருந்து நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட கைதிகள் கலந்துகொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அந்த சிறைத்துறை அதிகாரி உட்பட 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications