இந்திய ரயில்வேக்கு 1000 டீசல் என்ஜின்கள் தயாரிக்கும் ரூ.17,250 கோடி ஆர்டரை கைப்பற்றிய ஜி.இ.
டெல்லி: இந்திய ரயில்வே துறைக்கு 1000 டீசல் என்ஜின்களை செய்து கொடுக்க ரூ.17 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள ஆர்டர் ஜி.இ. நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
இந்திய ரயில்வே துறைக்கு 11 ஆண்டுகளில் 1000 டீசல் என்ஜின்களை தயாரித்துக் கொடுக்க ரூ.17 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள ஆர்டர் ஜி.இ. நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜி.இ. நிறுவனம் என்ஜின்களை தயாரிக்க இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளை துவங்குகிறது.

டீசல் என்ஜின்களை தயாரிக்க பீகாரில் உள்ள மர்ஹோவ்ராவில் ஒரு தொழிற்சாலையும், பஞ்சாபில் உள்ள பதின்டா மற்றும் குஜராத்தின் காந்திதாமில் மெயின்டெனனஸ் ஷெட்டுகளையும் அமைக்கிறது.
ரயில்வே துறையில் 100 சதவீதம் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. இந்நிலையில் ரயில்வேக்கான மிகப் பெரிய ஆர்டர் ஜி.இ. நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
இது தங்களுக்கு மிகவும் முக்கியமான ஆர்டர் என்று ஜி.இ. நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்தியா மற்றும் ஜி.இ. நிறுவனத்திற்கு மைல்கல் ஆகும் என்று ஜி.இ. நிறுவன சேர்மன் ஜெப் இம்லெட் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications