தருண் தேஜ்பாலின் டெல்லி வீட்டில் கோவா போலீஸ் சோதனை!

டெஹல்காவின் முன்னாள் நிறுவன ஆசிரியரான தருண் தேஜ்பால், சக பெண் பத்திரிகையாளருக்கு கோவா நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்பது புகார். இது தொடர்பாக தருண் தேஜ்பால் மீது பலாத்கார முயற்சி வழக்கை கோவா போலீசார் பதிவு செய்தனர்.
பின்னர் இது தொடர்பான விசாரணைக்கு நேற்று ஆஜராகுமாறு தருண் தேஜ்பாலுக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் தாம் நேரில் ஆஜராக கால அவகாசம் கோரி தேஜ்பால் ஃபேக்ஸ் ஒன்றை கோவா போலீசுக்கு அனுப்பியிருந்தார்.
இதை நிராகரித்த கோவா போலீசார் தருண் தேஜ்பாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை பிறப்பித்தனர். பின்னர் இன்று அதிகாலை முதல் டெல்லியில் உள்ள தருண் தேஜ்பால் வீட்டில் டெல்லி போலீசார் உதவியுடன் கோவா போலீசார் சோதனை நடத்தினர்.
ஆனால் இந்த சோதனையின் போது தருண் தேஜ்பால் வீட்டில் இல்லை. இதனால் தருண் தேஜ்பாலிடம் இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கோவா மற்றும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
அத்துடன் தருண் தேஜ்பாலின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications