உன்னாவ் தங்க வேட்டை.. ரொம்ப முட்டாள்தனமா இருக்கே.. சரத்பவார் எதிர்ப்பு

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சாது சோபன் சர்க்கார் கூறியதன் பேரில் தங்க புதையல் வேட்டையில் தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த தங்க புதையல் தேடுதல் வேட்டைக்கு மத்திய அமைச்சர் சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், தங்க புதையல் வேட்டையில் மத்திய அரசு பங்கேற்க கூடாது. சாது சோபன் சர்க்கார் முட்டாள்தனமாக தெரிவித்து உள்ளார். இது வெறும் மூடநம்பிக்கை. தங்க புதையல் தேடுதல் வேட்டைக்கு பிறகு தங்கம் எதுவும் கிடைக்காது.
சாதுவின் கூற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோக கூடாது. இதுபோன்ற கண்மூடித்தனமான நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்தால், அவற்றை நாமே ஊக்குவிப்பதாக ஆகி விடும்.
இதற்கு எதிராகவும், இதனை நம்புபவர்களுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். இதுபோன்ற மூட நம்பிக்கையை எங்களது தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒருபோதும் நம்பாது என்றார்.












Click it and Unblock the Notifications