எம்.பிக்களை நக்கல் செய்யும் 'ரேடியோ ஜாக்கிகள்': பாயப் போகிறது மத்திய அரசு
டெல்லி: எம்.பி.க்களை கிண்டல் செய்யும் ரேடியோ ஜாக்கிகள் அதாவது ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி ராப்ரி தேவி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை ரேடியோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இனி அவர்கள் எல்லாம் உஷாராக இல்லாவிட்டால் சங்கடம் தான்.

தனியார் எஃப்.எம்.களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் போன்று பேசுவதும், அவர்களை கிண்டல் அடிப்பதுமாக இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எம்.பி.யும், நடிகையுமான ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில்,
இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சில நேரங்களில் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மீது என்ன வகையான நடவடிக்கை எடுப்பது என்று பரிசீலித்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications