நேதாஜி பற்றிய மேலும் 25 ஆவணங்களை நாளை வெளியிடுகிறது மத்திய அரசு
டெல்லி: இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் உள்ள மேலும் 25 ஆவணங்கள் நாளை வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜியின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நிலவுகிறது. அவர் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்றும் இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து 1964-ம் ஆண்டு இறந்து விட்டார் என்றும் பல தகவல்கள் கூறுகின்றன. எனினும் அவருடைய கடைசி கால வாழ்க்கை பற்றி மர்மம் நிலவி வந்தன.

இந்நிலையில் மத்தியில் பாஜக அரசு அமைந்ததும் நேதாஜி தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய அரசிடம் மேலும் உள்ள 25 ஆவணங்கள் நாளை வெளியிடப்படும் என மத்திய கலாசார துறை தெரிவித்துள்ளது.
மேலும் நேதாஜி தொடர்பாக மற்ற நாடுகளில் உள்ள ஆவணங்களை அந்தந்த நாடுகள் வெளியிடுமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி நேதாஜியின் 119-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவர் தொடர்பான 100க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 2-வது கட்டமாக 50 ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications