திருமண வீட்டில் உற்சாகமாக நடனமாடிய மணமகன் மாரடைப்பில் மரணம் - குஜராத்தில் சோகம்
குஜராத்தில் திருமண வரவேற்பின் போது நண்பரின் தோளில் அமர்ந்து உற்சாகமாக நடனமாடிய மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மணமகனை அவரது நண்பர்கள் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு நடனமாடினர் அப்போது உற்சாகமாக நடனமாடிய மணமகன் சரிந்து விழுந்து மரணமடைந்தார். தாலி கட்டும் முன்பாகவே மாரடைப்பில் மணமகன் மரணமடைந்ததால் மணவீடு சோகவீடாக மாறியது.
ரனோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 25 தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் போர்சாத் கிராமத்தைச் சேர்ந்த சாகர் சோலங்கி என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

திருமணத்திற்காக மாப்பிள்ளை அழைப்பு மணமகள் கிராமத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. அப்போது மணமகனை அவரது நண்பர்கள் தோளில் தூக்கி வைத்து நடனமாடினர்.
மணமகனும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். திடீரென நண்பரின் தோளில் சரிந்து விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது மணமகன் ஆனந்த் உயிரிழந்து விட்டதாக கூறினர். உற்சாகமாக இருந்த மணமகளின் திருமண வீடு திடீரென சோகமயமாக மாறியது.












Click it and Unblock the Notifications