ஓட்டலின் பைப்பை பிடித்து ஏறி 4வது மாடிக்குள் நுழைந்த இளைஞர்.. கேட்ட அந்த கேள்வி.. திடுக்கிட்ட பெண்
அகமதாபாத்: அகமதாபாத் ஓட்டலில் பைப்பை பிடித்து விறுவிறுவென ஏறி நான்காவது மாடிக்கு சென்ற குஜராத் இளைஞர், அங்கிருந்த பெண்ணிடம் என்னுடன் உறவு வைத்துக் கொள்ள விருப்பமா என்று கேட்டிருக்கிறார். அத்துடன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரோடாவில் உள்ள ஹோட்டலில் 26 வயது பெண் தனது கணவருடன் தங்கி உள்ளார். வீட்டில் பராமரிப்பு பணி நடந்து வருவதால் கடந்த ஒன்றரை மாதங்களாக ஓட்டலில் அவர் தனது கணவருடன் தங்கி உள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் மீது குஜராத்தின் சர்தார் நகரைச் சேர்ந்த பாரத் படேலுக்கு ஒரு கண் இருந்துள்ளது. ஓட்டலில் குடியிருந்து வருவதை அறிந்த பாரத் படேல், அந்த பெண்ணை அவரது கணவர் இல்லாத நேரமாக பார்த்து சென்று வன்கொடுமை செய்துவிட முனைந்துள்ளார்.
திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் அந்த பெண்னின் கணவர் ஸ்னாக்ஸ் வாங்கி வருவதற்காக ஓட்டலுக்கு வெளியே சென்றுவிட்டார். அந்த பெண் மட்டும் தனியாக ஓட்டலுக்குள் சென்றதை பாரத் படேல் பார்த்துள்ளார். உடனடியாக பைப் வழியாக விறுவிறுவென ஓட்டலின் 4வது மாடி வரை ஏறி உள்ளார் பாரத் படேல். அப்போது தன்னை தவிர வேறு ஒருவர் ஓட்டல் அறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே ஓட்டலில் நுழைந்த பாரத் படேல், அந்த பெண்ணிடம் போய் என்னுடன் உறவு வைத்துக் கொள்கிறாயா என்று கேட்டுள்ளார்..
பின்னர் அந்த பெண்ணை கீழே தள்ளி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனிடையே அந்த நேரம் அவரது கணவரும் அங்கு வந்துவிட்டார். மனைவி கத்தி கூச்சலிடுவதை கண்டு ஓடிவந்த கணவர், ஓட்டலில் நுழைந்த பாரத் படேலுடன் சண்டைக்கு போய் இருக்கிறார். அப்போது பாரத் படேல், அந்த பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கினார்.. அதனை தொடர்ந்து அந்த பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த ஓட்டல் நிர்வாகத்தினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.. போலீசார் விரைந்து வந்து குற்றவாளியை பிடித்து கைது செய்தனர். நரோடா போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications