முஸ்லிம்களுக்கு 150 நாடுகள்... இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே.. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
அகமதாபாத்: முஸ்லிம்கள் குடியேறுவதற்கு 150 நாடுகள் இருக்கின்றன.. ஆனால் இந்துக்கள் குடியேறுவதற்கு இந்தியா என்ற ஒரே ஒரு நாடுதான் இருக்கிறது என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
குஜராத் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பேரணிகள் நடைபெற்றன. ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான நக்ரிக் சமிதி எனப்படும் குடிமக்கள் கமிட்டி சார்பாக இந்த பேரணி நடைபெற்றது.
சபர்மதி ஆசிரமம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியதாவது:
பாகிஸ்தானில் வாழும் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும் இதனை வலியுறுத்தினார். ஆனால் குடியுரிமை சட்ட விவகாரத்தில் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது விருப்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி மதிப்பளிக்கவில்லை.

குறைந்த இந்துக்கள் விழுக்காடு
1947-ல் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் 22% இந்துக்கள் இருந்தனர். தற்போது பலாத்காரங்கள், சித்ரவதைகள், ஒடுக்குமுறைகளால் பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் எண்ணிக்கை 3% ஆக குறைந்துள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு
இதனால்தான் இந்தியாவுக்கே திரும்புவதற்கு இந்துக்கள் விரும்புகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்ய விரும்பியதோ அதைத்தான் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சி இதனை எதிர்க்கிறது.

வங்கதேச இந்துக்கள்
வங்கதேசத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 2% ஆக குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2 லட்சம் இந்துக்களும் சீக்கியர்களும் வசித்தனர். ஆனால் தற்போது அவர்களது எண்ணிக்கை வெறும் 500 ஆக குறைந்துள்ளது.

இந்துக்களுக்கு ஒரே நாடு
முஸ்லிம்கள் 150 நாடுகளுக்கு சென்று குடியேற முடியும். ஆனால் இந்துக்களுக்கு இந்தியா என்ற ஒரே ஒரு நாடுதான் உள்ளது. அதனால் அவர்கள் இந்தியாவுக்கு திரும்புவதில் என்ன பிரச்சனை?

தலித் தலைவர்கள்
குஜராத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 10,000 அகதிகள் வசிக்கின்றனர். கட்ச் பிராந்தியத்தில் தலித்துகளாக அவர்கள் இருக்கின்றனர். ஆனால் தலித் தலைவர்களோ, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை எதிர்க்கின்றனர்.

இந்திய குடியுரிமை
இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கி; என்.ஆர்.சி. மூலம் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டால் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்துவிடுவோம் என அச்சப்படுகிற கட்சிகள்தான் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கின்றன. ஒடுக்குமுறைக்குள்ளாகி தஞ்சம் அடைந்த அகதிகளுக்கு குஜராத் மாநிலத்தில் இந்திய குடியுரிமை வழங்கும் பணி தொடங்கிவிட்டது.
இவ்வாறு விஜய் ரூபானி பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications