முஸ்லிம்களுக்கு 150 நாடுகள்... இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே.. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
அகமதாபாத்: முஸ்லிம்கள் குடியேறுவதற்கு 150 நாடுகள் இருக்கின்றன.. ஆனால் இந்துக்கள் குடியேறுவதற்கு இந்தியா என்ற ஒரே ஒரு நாடுதான் இருக்கிறது என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
குஜராத் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பேரணிகள் நடைபெற்றன. ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான நக்ரிக் சமிதி எனப்படும் குடிமக்கள் கமிட்டி சார்பாக இந்த பேரணி நடைபெற்றது.
சபர்மதி ஆசிரமம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியதாவது:
பாகிஸ்தானில் வாழும் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும் இதனை வலியுறுத்தினார். ஆனால் குடியுரிமை சட்ட விவகாரத்தில் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது விருப்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி மதிப்பளிக்கவில்லை.

குறைந்த இந்துக்கள் விழுக்காடு
1947-ல் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் 22% இந்துக்கள் இருந்தனர். தற்போது பலாத்காரங்கள், சித்ரவதைகள், ஒடுக்குமுறைகளால் பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் எண்ணிக்கை 3% ஆக குறைந்துள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு
இதனால்தான் இந்தியாவுக்கே திரும்புவதற்கு இந்துக்கள் விரும்புகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்ய விரும்பியதோ அதைத்தான் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சி இதனை எதிர்க்கிறது.

வங்கதேச இந்துக்கள்
வங்கதேசத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 2% ஆக குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2 லட்சம் இந்துக்களும் சீக்கியர்களும் வசித்தனர். ஆனால் தற்போது அவர்களது எண்ணிக்கை வெறும் 500 ஆக குறைந்துள்ளது.

இந்துக்களுக்கு ஒரே நாடு
முஸ்லிம்கள் 150 நாடுகளுக்கு சென்று குடியேற முடியும். ஆனால் இந்துக்களுக்கு இந்தியா என்ற ஒரே ஒரு நாடுதான் உள்ளது. அதனால் அவர்கள் இந்தியாவுக்கு திரும்புவதில் என்ன பிரச்சனை?

தலித் தலைவர்கள்
குஜராத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 10,000 அகதிகள் வசிக்கின்றனர். கட்ச் பிராந்தியத்தில் தலித்துகளாக அவர்கள் இருக்கின்றனர். ஆனால் தலித் தலைவர்களோ, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை எதிர்க்கின்றனர்.

இந்திய குடியுரிமை
இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கி; என்.ஆர்.சி. மூலம் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டால் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்துவிடுவோம் என அச்சப்படுகிற கட்சிகள்தான் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கின்றன. ஒடுக்குமுறைக்குள்ளாகி தஞ்சம் அடைந்த அகதிகளுக்கு குஜராத் மாநிலத்தில் இந்திய குடியுரிமை வழங்கும் பணி தொடங்கிவிட்டது.
இவ்வாறு விஜய் ரூபானி பேசினார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications