முஸ்லிம்களுக்கு 150 நாடுகள்... இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே.. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
அகமதாபாத்: முஸ்லிம்கள் குடியேறுவதற்கு 150 நாடுகள் இருக்கின்றன.. ஆனால் இந்துக்கள் குடியேறுவதற்கு இந்தியா என்ற ஒரே ஒரு நாடுதான் இருக்கிறது என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
குஜராத் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பேரணிகள் நடைபெற்றன. ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான நக்ரிக் சமிதி எனப்படும் குடிமக்கள் கமிட்டி சார்பாக இந்த பேரணி நடைபெற்றது.
சபர்மதி ஆசிரமம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியதாவது:
பாகிஸ்தானில் வாழும் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும் இதனை வலியுறுத்தினார். ஆனால் குடியுரிமை சட்ட விவகாரத்தில் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது விருப்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி மதிப்பளிக்கவில்லை.

குறைந்த இந்துக்கள் விழுக்காடு
1947-ல் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் 22% இந்துக்கள் இருந்தனர். தற்போது பலாத்காரங்கள், சித்ரவதைகள், ஒடுக்குமுறைகளால் பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் எண்ணிக்கை 3% ஆக குறைந்துள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு
இதனால்தான் இந்தியாவுக்கே திரும்புவதற்கு இந்துக்கள் விரும்புகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்ய விரும்பியதோ அதைத்தான் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சி இதனை எதிர்க்கிறது.

வங்கதேச இந்துக்கள்
வங்கதேசத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 2% ஆக குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2 லட்சம் இந்துக்களும் சீக்கியர்களும் வசித்தனர். ஆனால் தற்போது அவர்களது எண்ணிக்கை வெறும் 500 ஆக குறைந்துள்ளது.

இந்துக்களுக்கு ஒரே நாடு
முஸ்லிம்கள் 150 நாடுகளுக்கு சென்று குடியேற முடியும். ஆனால் இந்துக்களுக்கு இந்தியா என்ற ஒரே ஒரு நாடுதான் உள்ளது. அதனால் அவர்கள் இந்தியாவுக்கு திரும்புவதில் என்ன பிரச்சனை?

தலித் தலைவர்கள்
குஜராத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 10,000 அகதிகள் வசிக்கின்றனர். கட்ச் பிராந்தியத்தில் தலித்துகளாக அவர்கள் இருக்கின்றனர். ஆனால் தலித் தலைவர்களோ, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை எதிர்க்கின்றனர்.

இந்திய குடியுரிமை
இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கி; என்.ஆர்.சி. மூலம் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டால் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்துவிடுவோம் என அச்சப்படுகிற கட்சிகள்தான் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கின்றன. ஒடுக்குமுறைக்குள்ளாகி தஞ்சம் அடைந்த அகதிகளுக்கு குஜராத் மாநிலத்தில் இந்திய குடியுரிமை வழங்கும் பணி தொடங்கிவிட்டது.
இவ்வாறு விஜய் ரூபானி பேசினார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications