கேரளாவில் தொடரும் பழமைவாத தகர்ப்பு- குருவாயூர் கோவிலுக்குள் விரைவில் அனைத்து மதத்தினரும் அனுமதி?
கேரளாவின் குருவாயூர் கோவிலுக்குள் அனைத்து மத்தினரையும் அனுமதிப்பது குறித்து தீவிர விவாதங்கள் நடைபெறுகின்றன.
குருவாயூர்: கேரளாவில் அடுத்தடுத்து பழமைவாத நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டப்பட்டு காலத்திற்கேற்ப மாறுதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. குருவாயூர் கோவிலில் அனைத்து மதத்தினரையும் அனுமதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கல் வெளியாகி உள்ளன.
கடவுளின் தேசம் என போற்றப்படுகிற கேரளாவில் மத நம்பிக்கைகள் தீவிரமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிபிட்ட இந்து ஆலயங்களுக்குள் பிற மதத்தவர் நுழைய தடை, மேலாடையின்றிதான் வழிபாடு நடத்த வேண்டும் என காலங்காலமாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

தற்போது கால மாறுதல்களை கருத்தில் கொண்டு இவற்றில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. பிராமணர் அல்லாதோரை அர்ச்சகர்களாக்கி மாபெரும் சமூக சீர்திருத்தத்தை அரங்கேற்றியுள்ளது கேரளா அரசு.
இதேபோல் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்கிறது கேரளா அரசு. இதனையடுத்து தற்போது குருவாயூர் கோவிலில் அனைத்த் மதத்தினரையும் அனுமதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம்.
அதுவும் குருவாயூர் கோவில் தலைமை அர்ச்சகரே இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்திருப்பது ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. கேரளாவில் நிகழும் அடுத்தடுத்த அதிரடி சமூகம் மாற்றங்கள் தென்னிந்திய சமூகங்களில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர் சமூகவியலாளர்கள்.












Click it and Unblock the Notifications