5 வது மாநிலமாக இறைச்சிக்கு தடை விதித்தது பா.ஜ.க. ஆளும் ஹரியானா அரசு... 8 நாட்கள் அமல்...
டெல்லி: பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களைப் போல ஜைனர்கள் திருவிழாவை காரணம் காட்டி ஹரியானா அரசும் இறைச்சி விற்பனைக்கு 8 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது. இது பா.ஜ.க. அரசின் "சைவ பயங்கரவாதம்" எனவும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜைனர்களின் உண்ணாநோன்பு திருவிழா செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இதை காரணம்காட்டி மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு 3 நாட்கள் முதல் 8 நாட்கள் வரை தடை விதித்துள்ளன.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் ஹரியானா மாநிலமும் தற்போது இறைச்சி விற்பனைக்கு 8 நாட்கள் தடை விதித்துள்ளது. இத்தடையை அமல்படுத்துவதற்காக இறைச்சிக் கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பாரதிய ஜனதா அரசின் இந்த இறைச்சி தடை விவகாரம் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications