ஹரியானாவிலும் ஒரு சிவக்குமார்.. செல்பி எடுத்தவரின் போனை டொப்புன்னு தட்டி விட்ட முதல்வர்!
Recommended Video
சண்டீகர்: ஹரியானாவில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் மனோகர் லால் கட்டார், செல்பி எடுக்க வந்த இளைஞரின் போனை தட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எங்கும் செல்பி எதிலும் செல்பி என மக்கள் செல்பி மோகத்தில் உள்ளனர். இதில் சில இடங்களில் இங்கீதம் தெரியாமலும் ஆபத்தை உணராமலும் செல்பி எடுத்து சிக்கலில் சிக்குகின்றனர்.
இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னாலில் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு அந்த விழாவுக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் முதல்வரை நோக்கி சென்றார்.
சென்னையில் உள்ள 'அந்த மருத்துவ பல்கலையில்' கட்டண கொள்ளை.. கடிவாளம் போட சொல்லும் ராமதாஸ்
பரபரப்பு
உடனே அவர் தனது செல்போனை எடுத்து செல்பி எடுக்க முயன்றார். இதனால் பயங்கரமாக கோபம் கொண்ட முதல்வர் அந்த இளைஞர் செல்போனை தட்டி விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன்
இதே போல் நடிகர் சிவக்குமார், கடந்த ஆண்டு மதுரையில் நடந்த தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் கேட்காமல் செல்பி எடுக்க முயன்றார். உடனே அந்த நபரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டார்.
|
வருத்தம்
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அந்த இளைஞருக்கு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்தார். பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
மீண்டும் சர்ச்சை
இந்த நிலையில் இந்த ஆண்டு சென்னையில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சிவக்குமார் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை தட்டிவிட்டார். இதையடுத்து இவரை பக்ஷிராஜன் என்றே நெட்டிசன்கள் அழைத்து வந்தனர். அது போல் ஹரியானா மாநிலத்திலும் ஒரு பக்ஷிராஜன் இருப்பதாகவும் அவர் நடிகர் சிவக்குமார் ஸ்டைலில் போனை தட்டிவிட்டதாகவும் நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.