அயோத்தி பாபர் மசூதி வழக்கில் மிக மூத்த மனுதாரர் ஹசீம் அன்சாரி காலமானார்
லக்னோ: அயோத்தி பாபர் மசூதி- ராமர் கோவில் தொடர்பான வழக்கின் மிக மூத்த மனுதாரரான முகமது ஹசீம் அன்சாரி (வயது 96) லக்னோவில் காலமானார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் 1949-ம் ஆண்டு அகில பாரதிய ராமாயண மகாசபாவினர் ராமர், சீதை சிலைகளை உள்ளே வைத்தனர். இதை எதிர்த்து அப்போதே வழக்கு தொடர்ந்தவர் முகமது ஹசீம் அன்சாரி.

பின்னர் 1954-ம் ஆண்டு பாபர் மசூதியில் பிரார்த்தனை நடத்த அழைப்பு விடுத்ததற்காக அவர் 2 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்தார். இதைத் தொடர்ந்து முகமது ஹசீம் அன்சாரி அயோத்தி பாபர் மசூதி- ராமர் கோவில் தொடர்பான பல்வேறு வழக்குகளில் மனுதாரராக இருந்து வந்தார்.
தற்போது பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதிலும் ஒரு மனுதாரராக முகமது ஹசீம் அன்சாரி இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் லக்னோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முகமது ஹசீம் அன்சாரி காலமானார்.












Click it and Unblock the Notifications