5 பைசாவுக்காக.. 41 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு...கண்டக்டருக்கு இதுவரை 5 லட்சம் செலவு!
டெல்லி: டெல்லியில் வெறும் 5 பைசாவுக்காக கடந்த 41 ஆண்டுகளாக வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கிற்காக சம்பந்தப்பட்ட கண்டக்டரும், டெல்லி போக்குவரத்துக் கழகமும், இதுவரை சுமார் 5 லட்சம் செலவு செய்துள்ளனர்
டெல்லியில் கடந்த 1973-ம் ஆண்டில் நடத்துநராக பணியாற்றியவர் ரன்வீர் சிங் யாதவ். இவர் சம்பவ தினத்தன்று ஒரு பெண் பயணியிடம் 10 காசுகள் டிக்கெட்டுக்கு, 15 காசுகள் வாங்கியுள்ளார். மீதமுள்ள 5 பைசாவை கணக்கில் காட்டாமல் அவர் வைத்துக் கொண்டார்.

ஆனால், அடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே பயணச்சீட்டு பரிசோதகர்களிடம் மாட்டிக் கொண்டார் ரண்வீர். இதனால் ரன்வீருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதில், போக்குவரத்துக் கழகத்துக்கு, ரண்வீர் 5 பைசா நஷ்டம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறி, 1976-ம் ஆண்டு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இதை எதிர்த்து, தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ரன்வீர்.
இந்த வழக்கில் ரன்வீருக்கு 1990-ம் ஆண்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி மாதத்தில் இவ்வழக்கில் ரண்பீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு நஷ்ட ஈடாக ரூ. 6 லட்சம் வரை வழங்க உத்தரவிட்டது. எனினும், இதை எதிர்த்து, டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்படியாக கடந்த 41 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிந்தபாடில்லை. இந்த வழக்கிற்காக டெல்லி போக்குவரத்துக் கழகமும், ரன்வீரும் இதுவரை சுமார் 5 லட்சம் செலவு செய்துள்ளனர்.
தற்போது 5 பைசா நாணயமே புழக்கத்தில் இல்லாத சூழலில், 41 ஆண்டுகளுக்கு முந்தைய சில்லறை பிரச்சினையால் இன்னமும் நீதிமன்றப் படியேறி வருகிறார் தற்போது 73 வயதாகும் ரன்வீர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications