முதலிரவில்.. திடீர் விபரீதம்.. இவரெல்லாம் ஒரு மனிதரா? நினைச்சே பார்க்க முடியல.. மாப்ளைய வேற காணோமாமே
கான்பூர்: ஆசை ஆசையாக முதலிரவுக்கு சென்றது அந்த ஜோடி.. கடைசியில் இப்படி ஒரு விபரீதம் நடந்து 2 குடும்பத்தினரையும் நிலைகுலைய வைத்துவிட்டது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரை சேர்ந்தவர் அந்த நபர்.. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த பெண்ணுக்கு பெற்றோர் யாரும் கிடையாது.

கல்யாணம்: அதனால், அவரது அண்ணன் பொறுப்பில் வளர்ந்து வந்துள்ளார்.. இந்த கல்யாணத்தையும் அவரது அண்ணன்தான், தடபுடலாக நடத்தியிருக்கிறார். அன்றைய தினம் மணமக்களுக்கு முதலிரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...
ஆனால், பாலுணர்வை அதிகரிக்கும் மாத்திரைகளை சாப்பிட்டிருக்கிறார் மாப்பிள்ளை... எனவே, கல்யாண பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாக தெரிகிறது.. இதனால் பதறிப்போன குடும்பத்தினர், மணமகளை உடனடியாக கான்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. டாக்டர்களும் தீவிரமாக சிகிச்சை தந்தனர். ஆனால், அந்த பெண் இறந்துவிட்டார்.
உடல்நிலை பாதிப்பு: அதாவது, 3ம் தேதி கல்யாணம் நடந்திருக்கிறது.. அன்றைய தினம் முதலே உடல்நிலை பாதிப்பு இருந்துள்ளது.. மறுநாளும், அதற்கு மறுநாளும் நிலைமை மோசமாகிவிட்டதால், 7-ம் தேதி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். 10-ம் தேதி இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துவிட்டது.
இதைக்கேட்டு பெண்ணின் குடும்பத்தினர் கொந்தளித்து போய்விட்டார்கள்.. சம்பந்தப்பட்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசுக்கு ஓடினார்கள். தங்களது மாவட்ட எஸ்பியிடம் புகாரை தந்தனர்.. போலீசாரும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அதற்குள் மாப்ளை எஸ்கேப்... மொத்த குடும்பமும் ஊரைவிட்டே மாயமாகிவிட்டது.
மாப்பிள்ளை: 3ம் தேதி இந்த கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடித்த பெண்ணின் அண்ணன், மறுநாள் 4-ம் தேதி, மாப்பிள்ளை வீட்டிற்கு போயிருக்கிறார்.. அப்போதே பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
முதலிரவின்போது பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு உடலுறவில் ஈடுபட்டதால், பெண்ணுக்கு படுமோசமான காயங்கள் ஏற்பட்டதாகவும், அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் சொல்லப்படுகிறது.
டாக்டர்கள் : படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதித்தபோது, டாக்டர்களே மணப்பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம். காரணம், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அளவுக்கு, அந்த பெண்ணின் உடல்நிலை மோசமான நிலைமையில் இருந்ததாம்.
இறுதியில் அந்த காயங்களினாலேயே உயிரிழக்கும் துயரமும் நடந்துள்ளது.. அதாவது, அந்தரங்க பகுதியில் ஏற்பட்ட காயங்களால் தொற்று அதிகமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு உத்தரபிரதேசம் அதிர்ந்துபோயிருக்கிறது.
ஆலோசனை: டாக்டர்களின் முறையான ஆலோசனையின்றி, சொந்தமாகவே மருந்தை எடுத்து கொள்வதால், பல ஆண்கள் உயிரிழக்கும் சோகம் அவ்வப்போது நம்முடைய இந்தியாவிலேயே நடந்து வருகிறது.. மாத்திரைகளால் தான் உயிரிழப்பதுடன், பிறரும் உயிரிழக்கும் கொடுமை அரங்கேறிவருவது அதற்குமேல் கவலையை தருகிறது.. வாழவேண்டும் என்ற ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்த அந்த பெண்ணின் வாழ்க்கை, அநியாயமாக முடிந்துவிட்டது...!!!












Click it and Unblock the Notifications