கும்பமேளாவில் பறிபோன 30 உயிர்கள்! இதெல்லாம் பெரிய பிரச்சினையா? ஹேமமாலினியின் பேச்சால் கடும் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேச மாநில பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 நதிகள் சங்கமிக்கும் அங்கு பலர் புனித நீராடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மகா கும்பமேளா கூட்ட நெரிசல் பலி ஒரு பெரிய சம்பவம் இல்லை என நடிகையும் பாஜக இம்பியுமான ஹேமமாலினி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

maha kumbh mela 2025 stampede hema malini

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடி கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை முப்பது கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட பலரும் அங்கு சுவாமி தரிசனம் செய்து திரிவேணி சங்கத்தில் புனித நீராடி இருக்கிறார்கள். இந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தற்போது வரை கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகா கும்பமேளாவில் நடந்தது பெரிய சம்பவம் இல்லை என பாஜக எம்பியும் நடிகையுமான ஹேமமாலினி கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய அவர்," நாங்களும் கும்பமேளாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். நல்ல முறையில் நீராடினோம். உத்தர பிரதேச அரசால் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நிர்வாகிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் அல்ல. அது அவ்வளவு பெரிய சம்பவம் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த விவகாரம் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே பார்க்கிறேன்.

கும்பமேளாவுக்கு அதிகப்படியான மக்கள் வந்திருந்தார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிப்பது மிகவும் கடினமான விஷயம். மாநில அரசு தங்களால் முடிந்த அளவுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். தவறான விஷயங்களை சொல்வது தான் அவர்கள் வேலை" என கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+