சந்திரபாபு நாயுடுவின் ஹெரிட்டேஜ் பாலில் சோப்பு பவுடர் கலப்படம்- தெலுங்கானாவில் தடை?
ஹைதராபாத்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் பாலில் சோப்பு பவுடர் கலக்கப்படுவதாக தெலுங்கானா அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனால் தெலுங்கானாவில் ஹெரிட்டேஜ் பாலுக்கு தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
தெலுங்கானா சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. ரவீந்திர ரெட்டி பேசுகையில், பால் நிறுவனத்தினர் அதிகம் பால் சுரக்கவும், விரைவாக பால் கிடைக்கவும் கறவை மாடுகளுக்கு விசேஷ ஊசி போடுகிறார்கள். இதனால் பாலில் விஷ தன்மை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும், சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் பாலில் கலப்படம் செய்யப்படுகிறது. இந்த பாலை கேரள அரசு தடை செய்து உள்ளது. அதுபோல் இங்கு அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு தெலுங்கு தேச உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதற்கு அமைச்சரும் சந்திரசேகரராவ் மகனுமான கே.டி.ராமராவ் பதில் அளிக்கையில், ஹெரிட்டேஜ் என்பது ஒரு நிறுவனம். அதன் மீது குற்றம் சாட்டினால் அதற்கு அந்த நிறுவனம்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கு மாறாக தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் ஏன் ஆவேசப்பட வேண்டும். சந்திரபாபு நாயுடு நிறுவனத்துக்கு இவர்கள் பாதுகாவலர்கள் போல் பேசுவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றார்.
மேலும் துணை முதல்வர் டி.ராஜய்யா, ஹெரிட்டேஜ் உள்பட 11 நிறுவனங்களின் பால் பாக்கெட் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பஞ்சாகுட்டா பகுதியில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட ஹெரிட்டேஜ் பாலில் சோப்பு பவுடர் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த பாலை தடை செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
இதற்கு தெலுங்கு தேச உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் சபையை ஒத்தி வைத்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications