வாழ்நாள் முழுதும் காங்கிரஸ்காரராகவே வாழ்ந்த மதச்சார்பற்றத் தலைவர்...: படேலை புகழ்ந்த மன்மோகன் சிங்

நேற்று அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியக திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், குஜராத் முதல்வரும் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர்.
அப்போது விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது, ‘நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக, மதச்சார்பற்ற தலைவராக சர்தார் வல்லபால் படேல் திகழ்ந்தார். அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்களாக இருந்தனர். வாழ்நாள் முழுவதும் சர்தார் படேல் காங்கிரஸ்காரராகவே இருந்தார். அவர் இருந்த கட்சியில் நானும் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
மதச்சார்பற்ற கொள்கைக்காகவும், நாட்டை ஒருங்கிணைக்கவும் அரும்பாடுபட்டவர் படேல். நேரு, பட்டேல் போன்றோர் நாட்டிற்கு அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளனர். காந்தியும், பட்டேலும் 16 மாதங்கள் ஒன்றாக சிறையில் இருந்துள்ளனர்' என்றார்.












Click it and Unblock the Notifications