மகாத்மா காந்தி படுகொலைநாளை "ஆட்டம் பாட்டத்துடன்" "கொண்டாடி" மகிழ்ந்த இந்துமகாசபை கும்பல்!!
மீரட்: தேசத்தின் தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளை நாடே அனுசரித்துக் கொண்டிருக்கிறது... ஆனால் இந்துமகாசபை என்ற கும்பல் மட்டும் ஆட்டம், பாட்டத்துடன் இந்த துயரநாளை 'கொண்டாடி' மகிழ்ந்திருக்கிறது.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் இந்துத்துவா வெறியரான நாதுராம் கேட்சேவால் டெல்லியில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கேட்சே, இன்றைய இந்துத்துவா அமைப்புகளின் முன்னோடிகளான இந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்.

தேசத்தின் தந்தையை படுகொலை செய்த கோட்சே 1949-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி தூக்கிலிட்டு தண்டிக்கப்பட்டார். காந்தியடிகள் நினைவுநாளை நாடு இன்று அனுசரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் கோட்சே ஆதரவாளர்களான இந்து மகாசபையில் இந்நாளை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் காந்தி படுகொலை நாளை பெருவிழாவாக கொண்டாடியுள்ளனர் இந்து மகாசபையினர். இது தொடர்பாக இந்து மகா சபையின் தேசிய துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா கூறுகையில், தேசத்தின் ஹீரோ நாதுராம் கோட்சேவால் காந்தி சுட்டு வீழ்த்தப்பட்ட நாளை நாங்கள் கொண்டாடி மகிழ்கிறோம். இன்றைய நாளில் ஆட்டம், பாட்டம் என இனிப்புகளுடன் மகிழ்வாகக் கொண்டாடுகிறோம்.
எங்களுக்கு ஜனவரி 30-ந் தேதி என்பது ஒரு பண்டிகை நாள். இந்தியா ஒரு இந்துராஷ்டிரம். இந்த தேசத்தின் ஹீரோ காந்தி அல்ல... எங்களது கோட்சேதான். காந்தியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றிய தேசப்பற்றாளர் கோட்சே... மாவீரர் கோட்சே என்றார்.
இந்துமகாசபையினர்தான் நாடு முழுவதும் கோட்சே சிலைகளை வைக்கப் போவதாக மிரட்டலும் விடுத்திருந்தனர். கடந்த வாரம் முன்னர் நாட்டின் குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதியை கருப்பு தினமாகவும் கடைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications