"இந்துக்கள் அமைதியை விரும்புபவர்கள்.. கலவரம் செய்பவர்கள் அல்ல".. அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா பேச்சு
குவாஹாட்டி: "இந்துக்கள் என்றும் அமைதியை விரும்புபவர்கள்.. கலவரம் செய்பவர்கள் அல்ல" என்று அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கூறியுள்ளார்.
குஜராத்தில் கவலரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டதாக அமித் ஷா பேசியது தொடர்பான கேள்விக்கு, ஹிமந்த சர்மா இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும், டெல்லியில் இளம்பெண் சாரதா கொலை செய்யப்பட்டதற்கு 'லவ் ஜிகாத்' சதியே காரணம் என்று கூறிய அவர், இந்தப் பிரச்சினையில் அரசு தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புயலை கிளப்பிய அமித் ஷா பேச்சு
குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. முன்னதாக, அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமித் ஷா, குஜராத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தக்க பாடம் புகப்பட்டுள்ளதாக பேசியது பெரும் விமர்சனத்துக்கு வித்திட்டது. முஸ்லிம் சமூகத்தினரை குறிப்பிட்டே அமித் ஷா இவ்வாறு கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர்களும் தெரிவித்து வந்தனர். எனினும், பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர்.

"இந்துக்கள் கலவரத்தை விரும்புவதில்லை"
இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது, அமித் ஷாவின் மேற்குறிப்பிட்ட பேச்சு தொடர்பாக நெறியாளர் அவரிடம் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், "அமித் ஷா பேசியதில் என்ன தவறு இருக்கிறது? 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே, 2002-க்கு பிறகு குஜராத்தில் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. அமைதி பூங்காவாக குஜராத் இருக்கிறது. அப்படியிருக்கும் போது, அமித் ஷா கூறியது உண்மைதானே?
பொதுவாக ஒன்றை சொல்கிறேன். இந்துக்கள் கலவரத்தை விரும்புபவர்கள் அல்ல. மாறாக, அமைதியை விரும்புபவர்கள். கலவரங்களில் ஈடுபட அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஜிகாத் மீது இந்துக்களுக்கு நம்பிக்கை கிடையாது" எனக் கூறினார்.

"சாரதா கொலைக்கு பின்னால் லவ் ஜிகாத்"
இதனைத் தொடர்ந்து, லவ் ஜிகாத் பற்றி அடிக்கடி பாஜக தலைவர்கள் பேசி வருவது குறித்து ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் கேள்வியெழுப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "நாட்டில் நடைபெறாத ஒரு விஷயத்தை பற்றியா பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள்? இந்தியாவில் லவ் ஜிகாத் நடைபெறுவதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவ்வளவு ஏன்.. டெல்லியில் இளம்பெண் சாரதா கொலை செய்யப்பட்டது கூட லவ் ஜிகாத் பிரச்சினையால் தான்.

"மற்ற கட்சிகள் பயப்படுவார்கள்"
உண்மைக் கண்டறியும் சோதனையின் போது கூட, சாரதாவை கொலை செய்ததால் நான் சொர்க்த்துக்கு போவேன் என அப்தாப் கூறியிருக்கிறார். ஆனால், பாஜகவை தவிர மற்ற கட்சிகள் லவ் ஜிகாத்தை பற்றி பேச பயப்படுகிறார்கள். குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்தும் அரசியலை செய்து வருவதால் இந்த விஷயங்கள் குறித்து அவர்கள் பேச மாட்டார்கள். ஆனால், பாஜக அதுபோன்ற அரசியலை செய்யவில்லை. எது உண்மையோ அதை பாஜக துணிந்து பேசும்" இவ்வாறு ஹிமந்த விஸ்வ சர்மா கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications