ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரிக்குமா?- உள்துறை அமைச்சகம் பரிந்துரையால் பரபரப்பு
ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவின் கோரிக்கையின் பேரில், ஜெயலலிதாவின் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று இதயமுடக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை.
கடந்த 75 நாட்களுக்கும் மேலாக, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஜெயலலிதா திடீரென உயிரிழந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, பலரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா சிகிச்சை
ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த போது அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை,தமிழக ஆளுநர்,ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் என ஏராளமானோர் மருத்துவர்களிடம் மட்டுமே விசாரித்து திரும்பினர்.

தொண்டர்கள் அதிர்ச்சி
ஜெயலலிதா நன்கு குணமாகி வந்தார் என்று கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஆனால் அமைச்சர்களோ, அதிமுக நிர்வாகிகளோ கலங்காமல் தங்களின் பணிகளை செய்து வருகின்றனர்.

சசிகலா புஷ்பா
இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த புகார் மனுவை கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார்.

உள்துறை அமைச்சகம் பரிந்துரை
இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் புகார் கடிதத்தை சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. மேலும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் பற்றி சிபிஐ விசாரிக்குமா?
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications