இதுகெல்லாமா வீட்டை காலி செய்ய சொல்வாங்க.. உ.பி.யில் வினோதம்
அலிகார்: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவில் சேர்ந்ததற்காக வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறிய அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக வாக்குகளை கைப்பற்றி மத்தியில் ஆட்சியை மீண்டும் பிடித்தது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் நரேந்திர மோடி 2-ஆவது முறையாக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் பாஜகவுக்கான உறுப்பினர் சேர்க்கை வாரணாசி தொகுதியில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்தது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வாரணாசி சென்றார்.
அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் சேர்க்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். அப்போது மாநிலத்தின் அலிகாரில் வசிக்கும் குலிஸ்தானா என்பவர் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.
Aligarh: A woman, Gulistana was allegedly asked to vacate her home by her landlord after she joined BJP. She says, "I joined BJP yesterday, when my landlord came to know of it she misbehaved with me & asked me to vacate immediately." (7.7.19) pic.twitter.com/nePXOvzA5D
— ANI UP (@ANINewsUP) July 7, 2019
இதுகுறித்து அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் குலிஸ்தானாவிடம் கடுமையாக நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து வீட்டை காலி செய்துவிட்டு உடனடியாக வெளியேறும்படி உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் குலிஸ்தானா அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications