"லிப் டூ லிப்".. நடுரோட்டிலயே "காமக்களியாட்டம்".. இந்த பெண் காலை தூக்கி எங்கே போட்ருக்கார்னு பாருங்க
பெட்ரோல் டேங்க்கில் உட்கார்ந்து காதலனுக்கு முத்தம் தந்தார் காதலி
சாம்ராஜ்நகர்: காலை தூக்கி காதலன் மீது போட்டு கொண்டு, முத்தம் கொடுத்து கொண்டே பைக்கில் செல்கிறார் ஒரு இளம்பெண்..!
தற்போது கோடை காலம் துவங்கிவிட்டது.. அதனால், விடுமுறை நாட்களில், சுற்றுலாபயணிகள் விருப்பமான இடங்களுக்கு சென்று வருகிறார்கள்
அந்த வகையில், கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மிக முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.. ஆனால், சமீபகாலமாகவே, இங்கு குடும்பத்துடன் வருபவர்களைவிட, காதல் ஜோடிகள்தான் பெருமளவு படையெடுத்து விட்டனர்.

ஆபாசங்கள்
அதேசமயம், இவர்களின் அட்டகாசங்களும், அத்துமீறல்களும், ஆபாசங்களும் எல்லைமீறி போய் கொண்டிருக்கின்றன.. ஒதுக்குப்புறத்தில், மறைவிடத்தில் மட்டுமே தென்பட்டு கொண்டிருந்த இப்படிப்பட்ட அசிங்கங்கள், வெளிப்படையாகவே தற்போது அதிகரித்துவிட்டது.. அப்படித்தான், ஒரு காதல் ஜோடியின் சேட்டைகள், காண்போருக்கு குமட்டலை தந்துவிட்டது.. குண்டல்பேட்டை சாலையில் பைக்கில் ஒரு ஜோடி வந்துள்ளது.. அப்போது திடீரென அந்த இளம்பெண் பைக்கில் ஏறி காதலன் மேல் காலை விரித்து உட்கார்ந்தார்.

பெட்ரோல் டேங்க்
அந்த பெண் எங்கே உட்கார்ந்தார் தெரியுமா? பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது உட்கார்ந்து கொண்டு, காதலனை நோக்கி திரும்பி உட்கார்ந்து, அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே போகிறார்.. ரோடெல்லாம் முத்தம் தந்து கொண்டே போகிறார்.. அந்த காதலனும் பைக்கை ஓட்டியபடி செல்கிறார்.. பின்சீட்டில் உட்கார வேண்டிய பெண், பெட்ரோல் டேங்கின்மீது உட்கார்ந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ந்து விட்டனர்.

லிப் டூ லிப்
பிறகு திடீரென காதலனை இறுக்கி கட்டிப்பிடித்து, "லிப் டூ லிப்" முத்தம் கொடுத்தபடி பயணிப்பதை பார்த்து ஒருநிமிஷம் ஆடிப்போய்விட்டனர்.. அந்த வழியாக சென்ற மேலும் பலர், உடனே தங்கள் செல்போனில் இதை வீடியோவாகவும் எடுத்துக் கொண்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.. அந்த வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த அனைவரும் விக்கித்து வருகின்றனர்.

சல்லாபம்
அந்த வீடியோவில், இவர்கள் பைக் ஓட்டி செல்லும்போது, எதிரில் வேகமாக ஒரு லாரி வருகிறது.. பஸ் வருகிறது.. ஆனால், எதைப்பற்றியும் இவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.. அந்த காதல் ஜோடி தங்களை மறந்து உல்லாச வானில் சல்லாபத்துடனேயே பறந்து கொண்டிருக்கிறது.. இதை ஆபாசம் என்பதைவிட, உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் பொருட்படுத்தாமல் இப்படி ஜாலி ரைடு செல்கிறார்களே என்ற வேதனைதான் நமக்கு முதலில் மிஞ்சி வெடிக்கிறது.

வெட்கம் - வேதனை
அதைவிட கொடுமை, இவர்களின் இந்த காட்சியை பார்த்துவிட்டு, அதை ரசிப்பதற்காகவே, பலர் காதலர்களை பின்தொடர்ந்து செல்கின்றனரே தவிர, அவர்களை யாருமே எச்சரிக்கவில்லை.. தடுத்து நிறுத்தவும் இல்லை.. இத்தனை பேர் நம்மை வீடியோ எடுக்கிறார்களே என்று, அந்த ஜோடி கொஞ்சமும் வெட்கப்படவில்லை.. என்னத்த சொல்றது?! காதலுக்கும், காமத்துக்கும் கண்ணில்லைதான்.. ஆனால், லாரியின் அடியில் சிக்கினால், யாராக இருந்தாலும்சரி, பரலோகம் போய் சேர வேண்டியதுதான் என்பதை யார் இந்த ஜோடிக்கு எடுத்து சொல்வது..!?












Click it and Unblock the Notifications