மனைவிகளை மாற்றிக்கொள்ளும் "வைப் ஸ்வாப்"! கூப்பிட்ட கணவன்.. மறுத்த மனைவி! "இயற்கைக்கு மாறாக.." கொடுமை

Subscribe to Oneindia Tamil

போபால்: இளம் பெண் ஒருவர் வைப் ஸ்வாப்பிற்கு வர மறுத்ததால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்போதெல்லாம் ஆங்காங்கே பெரிய பார்ட்டிகளில் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பகீர் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்த கலாசாரம் அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் மனைவிகள் கட்டாயப்படுத்தியே ஈடுபடுத்தப்படுகிறார்கள். அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது மத்தியப் பிரதேசத்தில் நடந்து உள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள நட்சத்திர விடுதியில் பகீர் சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. இது தொடர்பாகப் பெண் ஒருவர் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களைக் கண்டறிந்து உள்ளனர். அதாவது புகார் அளித்த அந்த நபரின் கணவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் மேனேஜராக இருந்து வருகிறார்.

 பெண் புகார்

பெண் புகார்

அந்த பெண் அளித்துள்ள புகாரில், "எனது கணவர் அமர் என்னை ஹோட்டல் அறையில் அடைத்துப் பூட்டினார். எனது மொபைலையும் பிடுங்கிக் கொண்டார். பிகானேரில் உள்ள அந்த ஹோட்டலில் நான் தனிமையில் தான் இருந்தேன். அதன் பின்னர் இரண்டு நாட்கள் கிழித்து, அமர் பயங்கர குடிபோதையில் வந்து ஹோட்டல் கதவைத் திறந்தார். மது குடிப்பதும், போதைப்பொருள் எடுப்பதும் தனக்கு வழக்கமான ஒன்று என்றார்.

 வைப் ஸ்வாப்

வைப் ஸ்வாப்

மேலும், அவர் பல பெண்களுடன் பாலியல் உறவு வைத்து கொண்டு இருக்கிறார். ஆண்களுடன் உடலுறவு கொள்வதும் தனக்கு வாடிக்கையான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் என்னிடம் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் வைப் ஸ்வாப் (wife swap game) கேமிற்கு நான் வர வேண்டும் என்றார். நான் அதற்கு முடியாது என்று மறுத்த போது, அவர் என்னைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினார்.

 மார்டன் கலாசாரம்

மார்டன் கலாசாரம்

மேலும், என்னை பார்த்து உனக்கு மார்டன் கலாச்சாரமே தெரியல.. இப்போல்லாம் இதுதான் ட்ரெண்ட் என்று சொன்னார்.. என்னுடன் வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவும் கொண்டார். எனது கணவரின் இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கையால் எனக்கு உடலில் பயங்கர காயம் ஏற்பட்டது. இருந்த போதிலும், நான் அந்த வைப் ஸ்வாப் கேமில் கடைசி வரை கலந்து கொள்ளச் சம்மதிக்கவில்லை.

 வரதட்சணை கொடுமை

வரதட்சணை கொடுமை

இது குறித்து நான் எனது மாமியார் மற்றும் கணவரின் தங்கையிடம் தான் முதலில் சொன்னேன். ஆனால் நான் சொல்வதை எல்லாம் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. மேலும், நான் தான் மிக மார்டனாக நடந்து கொள்வதாக என்னையே சாடினர். மேலும், எனது கணவருடன் மாமியாரும் மைத்துனரும் இணைந்து கொண்டு ₹ 50 லட்சம் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தினர்.

 துன்புறுத்தல்

துன்புறுத்தல்

இந்த வைப் ஸ்வாப்பில் பங்கேற்க வேண்டும் என்று அவர் பல மாதங்களாக என்னை அடித்துத் துன்புறுத்தி வந்தார். இதனால் எனது உடல்நிலை மோசமடைந்தது. எனது உடலைக் கண்ட உறவினர்கள் தான் எனது நிலைமையை உணர்ந்து தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது. தாய் வீட்டிற்குச் சென்ற பிறகே அந்த பெண் இப்போது தனது கணவர் மீது புகார் அளித்து உள்ளார்.

 போலீசார்

போலீசார்

இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+