மாணவியை கோடாரியால் வெட்டி விட்டு விஷம் குடித்து மாணவர் தற்கொலை - போலீஸ் விசாரணை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் முதலாமாண்டு என்ஜினியரிங் கல்லூரி மாணவியை கோடாரியால் வெட்டிய மாணவர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தென்மேற்கு ஐதராபாத்தில் உள்ளது அரோரா பொறியியல் கல்லூரி. இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவியான ரவளியை, கோடாரியால் வெட்டினார் வாலிபர் ஒருவர். பின்னர், மற்ற மாணவர்கள் அவரைத் துரத்திப் பிடிப்பதற்குள் அந்த வாலிபரும் விஷமருந்தினார்.
உடனடியாக அம்மாணவி மற்றும் வாலிபரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீட்டு வெவ்வேறு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி விஷமருந்திய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவியை கோடாரியால் தாக்கிய வாலிபர் மற்றொரு கல்லூரியில் படித்து வந்தவர் எனக் கூறப்படுகிறது.
மாணவி ரவளி இந்தக் கல்லூரியில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் முதலாம் ஆண்டு படிப்புக்கு சேர்ந்தார் என்று பேராசிரியர் ஸ்ரீலதா என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், "கல்லூரியில் இன்று காலை எங்களுடைய மாணவர்கள், பஸ் டிரைவர்கள், பாதுகாவலர்கள் முன்னிலையில் மர்மநபர் ஒருவர் எங்களது முதலாம் ஆண்டு மாணவியை தாக்கிவிட்டார். அப்போது நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். மாணவி பலத்த காயம் அடைந்து இருந்தார். அதற்கிடையே மாணவியை தாக்கிய வாலிபர் விஷத்தை குடித்துவிட்டார். எங்களுடைய ஆசிரியர்கள் அவர் விஷம் குடிப்பதை தடுக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை."எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications