ரெசார்டுகளில் நள்ளிரவில் விபச்சார ரெய்டு போகும் ஹைதராபாத் போலீஸ்! தம்பதிகளுக்கு அவஸ்தை
ஹைதராபாத்: ரெசாட்டுகளில் நள்ளிரவில் ஜோடிகள் தங்கியிருக்கும் அறைக்கதவை தட்டிய ஹைதராபாத் போலீசாரால் புத்தாண்டு கொண்டாடம் பாதிக்கப்பட்டதாக புலம்புகின்றனர் ஜோடிகள்.
ஹைதராபாத் நகரை சுற்றிலும் அதிக ரெசார்ட்டுகள் உள்ளன. இங்கு பண்டிகை காலங்களில் கணவன்-மனைவி வந்து தங்கி உல்லாசமாக பொழுது போக்குவது வழக்கம். ஆனால், காதலர்களும் அல்லது விபச்சார தொழில் செய்வோர்களும், தம்பதிகள் என்ற போர்வையில் இங்கு வந்து உல்லாசம் அனுபவிப்பதாக சந்தேகிக்கும் ஹைதராபாத் போலீசார், ரெசார்டடுகளில் அவ்வப்போது சோதனைகளை நடத்திவருகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்கள் வருகை பாதிக்கப்படுவதாக அங்கலாய்க்கினஅறனர் ரெசார்ட் உரிமையாளர்கள்,. மொய்னாபாத் பகுதியில் பதினைந்து ஆண்டுகளாக ரெசார்ட் நடத்திவரும் ஒருவர் கூறுகையில், எங்கள் ரெசார்ட்டில் ஆபாச நடனமோ, பிற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கோ அனுமதி கிடையாது. கவுரவமான தோற்றத்தில் வரும் ஜோடிகளுக்கு அறைகளை ஒதுக்கி தருகிறோம். அவர்கள் காதலர்களா, கணவன்-மனைவியா என்பதை நாங்கள் எப்படி கண்டுபிடிப்பது என்கிறார்.
மற்றொரு ரெசார்ட் உரிமையாளர் கூறுகையில், கடந்த பத்து நாட்களாகவே போலீசார் அவ்வப்போது வந்து சோதனை நடத்துகின்றனர். ஜோடிகள் தங்கியிருக்கும் அறையில் ஆணுறை கண்டெடுக்கப்பட்டாலும் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கின்றனர். ஜோடிகள் தங்கியிருக்கும் அறையில் ஆணுறை கிடைக்காமல், வேறு எங்கு கிடைக்கும் என்று எங்களுக்கு புரியவில்லை. இதில் எப்படி நாங்கள் கணவன் மனைவிக்கு அறிவுரை கூற முடியும். கணவன் மனைவியா என்பதை கண்டறிய ஆதார் அட்டை கேட்கிறார்கள். ரெசார்ட்டுக்கு யாராவது ஆதாருடன் வருவார்களா.. என்றார்.
ரெசார்ட்டில் தங்கள் முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடிய, கணவன், மனைவி தங்கியிருந்த அறையை இரவு 11 மணிக்கு போலீசார் தட்டி சோதனை நடத்தியதாக ஆதங்கம் வெளிப்படுத்தினார் அந்த கணவர். இதுகுறித்து அவர் கூறுகையில், "11 மணிக்கு யாரோ கதவை தட்டுகிறார்கள் என்று அறிந்ததும் பயம் வந்துவிட்டது. பிறகு போலீசார் சோதனை நடத்தினர். ரெசார்ட் உரிமையாளர் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும், அன்றை தினம் எங்கள் சந்தோஷம் பறிபோய்விட்டது" என்றார்.
ஹைதராபாத் போலீசார் இப்படி விவஸ்தையில்லாமல் செய்யும் செயல்களுக்கு முதல்வர் சந்திரசேகரராவ் கடிவாளம் போடுவாரா?
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications