என்னால் சிறப்பாக நடிக்க முடியும்.. ஹீரோயினை தேர்வு செய்வது டைரக்டரின் பொறுப்பு - லாலு பிரசாத்
பாட்னா: பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சரும், முன்னாள் அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் சினிமாப்படம் தயாரிக்கப்பட்டால் அந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தில் தானே நடிப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்திப்பட இயக்குனர் இர்பான் கானின் புதிய படமான ‘மடாரி' படத்தின் அறிமுகவிழா பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அப்போது அவரை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் சந்தித்து பேசினார்.

அப்போது இர்பானிடம் கூறிய லாலு, நான் எந்த சினிமா நடிகருக்கும் குறைந்தவன் இல்லை. என் வாழ்க்கையை பற்றி ஏதாவது படம் எடுத்தால் அதில் நானே ஹீரோவாக நடிக்க விரும்புகிறேன். ஹீரோயினை தேர்வு செய்வது உங்கள் பொறுப்பு என கூறி உள்ளார்.
நான் ஏற்கனவே ‘பத்மஸ்ரீ லாலுபிரசாத் யாதவ்' என்ற படத்தில் சுனில் ஷெட்டியுடன் நடித்து இருக்கிறேன். என்னுடைய பள்ளி-கல்லூரி வாழ்க்கையின்போது எனக்கு பிடித்தமான நடிகராக திலீப்குமார் இருந்தார். அந்த காலக்கட்டத்தில் எனது மனம் கவர்ந்த கதாநாயகிகளாக வைஜெயந்திமாலா, ஹேமமாலினி ஆகியோர் இருந்தனர். எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் ஜானி வால்கர் ஆவார்.இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.












Click it and Unblock the Notifications