கொரோனா காலத்தில்..வீட்டில் உட்கார்ந்து கொண்டு தாடி வளர்த்தவர் தானே பிரதமர் மோடி..அட்டாக் மோடில் மமதா
நந்திகிராம்: கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் தான் மக்களுடன் மக்களாகக் களத்தில் நின்றதாகக் கூறிய மம்தா, அதே காலத்தில் பிரதமர் வீட்டில் தாடி வளர்த்ததாகவும் விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதில் 79% வாக்குகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் நாளை தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திரிணாமுல் vs பாஜக
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்றாவது முறையாக மம்தாவைத் தேர்தலில் வெற்றிபெற விட்டுவிடக் கூடாது என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர்களும் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு பிரசார பணிகளைக் கவனித்து வருகிறார்கள்.

மம்தா பேச்சு
அதேபோல பாஜகவின் திட்டங்களைத் தகர்க்கும் முயற்சிகளை மம்தா தொடர்ந்து எடுத்து வருகிறார். பாஜக மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராக வலுவான விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார். இந்நிலையில், நந்திகிராமில் மக்களிடையே பேசிய அவர், தான் எந்தத் தொகுதியில் வேண்டுமென்றாலும் போட்டியிட்டிருக்கலாம் என்றும் இருப்பினும், இங்குள்ள தாய்மார்களுக்கு மரியாதை செய்யவே நந்திகிராமில் போட்டியிடுவதாக அழர் குறிப்பிட்டார்.

தாடி வளர்த்தவர்
கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்ட போது பாஜகவினர் எங்கு சென்றிருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார். கொரோனா காலத்தில் களத்தில் இறங்கி பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வட்டங்களை வரைந்தேன். ஆனால் பிரதமர் மோடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு, அவர் தாடியைத் தான் வளர்த்தார் என்று கடுமையாக விமர்சித்தார்.

பெண்களை மதிப்பதில்லை
மேலும், பாஜகவினர் பெண்களை என்றும் மதிப்பதில்லை என்றும் அவர் விமர்சித்தார். கோஷமிடும்போது கூட ஜெய் ஸ்ரீராம் என்று தான் கூறுகிறார்கள். அதிலும்கூட ஜெய் சீதா ராம் என்று கோஷமிட அவர்களுக்கு மனம் வருவதில்லை. அவர்கள் சீதையை விட்டு விடுகிறார்கள். பெண்களை மதிக்காத கட்சியாக பாஜக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications