For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய பாதுகாப்பு படை வீரர்களை நினைத்து பெருமைபடுகிறேன்: பிரதமர் மோடி

By Karthikeyan
Google Oneindia Tamil News

மைசூரு: இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் செயல்களை நினைத்து பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மைசூரு, மகாராஜா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்த ஸ்ரீசுத்தூர் மடத்தின் நிறுவனர் ஸ்ரீசிவராத்திரி ராஜேந்திரமகாசுவாமிகளின் நூற்றாண்டு விழாவை தொடக்கி வைத்து, பிரதமர் நரேந்திரமோடி பேசியது: பதன்கோட்டில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத மனித இன எதிரிகள் இந்திய ராணுவப்படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலை நமது இந்திய ராணுவப்படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. இது பாராட்டுக்குரியதாகும். பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த ராணுவவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.

நமதுநாட்டின் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப்படைகள் பெருமைக்குரிய சேவையை ஆற்றி வருகிறார்கள். நமது எதிரிகளுக்கு எதிராக தேசம் எப்போதும் ஒன்றுபட்டு நின்றுள்ளது. எனவே, பயங்கரவாதிகளின் தீய எண்ணங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறினார்.

English summary
PM Narendra Modi says, I feel proud of our armed forces for Pathankot terror attack
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X