2019ல் பாஜக வென்றால் இந்தியா "இந்து பாகிஸ்தானாக" மாறும்.. சசி தரூர் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: 2019 லோக்சபா தேர்தலில் பாஜக மட்டும் வென்றால், "இந்து பாகிஸ்தான்" ஆக இந்த தேசத்தை மாற்றி விடுவார்கள் என்று திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எச்சரித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இந்திய ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார் சசி தரூர். அப்போதுதான் இந்தக் கவலையை அவர் வெளியிட்டார்.
சசி தரூரின் பேச்சிலிருந்து சில பகுதிகள்:

பாஜக வென்றால்
2019 பொதுத் தேர்தலில் பாஜக வெல்லக் கூடாது என்பது முக்கியமானது. ஒரு வேளை பாஜக வென்றால், இந்திய அரசியல் சட்டத்தை அது தூக்கி எறிந்து விடும். இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறி விடும்.

ராஜ்யசபாவில் மெஜாரிட்டி
லோக்சபாவில் தற்போது மெஜாரிட்டியுடன் பாஜக உள்ளது. இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளிடம் உள்ளன. ராஜ்யசபாவில் மட்டும்தான் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை.

ராஜ்யசபாவிலும் சாதிப்பார்கள்
ஆனால் பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் அடுத்த 4 -5 ஆண்டுகளில் ராஜ்யசபாவிலும் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைத்து விடும்.அப்படி நடந்தால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறி விடும்.

அழித்து விடுவார்கள்
பாஜக மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு வென்றால் அரசியல் சாசனத்தை அழித்து விடுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். புதிய அரசியல் சாசனத்தை படைப்பார்கள். இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறும்.

இந்து ராஷ்டிரத்தை அமைப்பார்கள்
வீர சாவர்கர் போன்றோர் கண்ட இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்க முயல்வார்கள். அமைப்பார்கள். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் கடுமையாக போராடி வென்ற சமத்துவ சமூகத்தை அழித்து விடுவார்கள் என்றார் சசி தரூர்.












Click it and Unblock the Notifications