2019ல் பாஜக வென்றால் இந்தியா "இந்து பாகிஸ்தானாக" மாறும்.. சசி தரூர் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: 2019 லோக்சபா தேர்தலில் பாஜக மட்டும் வென்றால், "இந்து பாகிஸ்தான்" ஆக இந்த தேசத்தை மாற்றி விடுவார்கள் என்று திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எச்சரித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இந்திய ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார் சசி தரூர். அப்போதுதான் இந்தக் கவலையை அவர் வெளியிட்டார்.
சசி தரூரின் பேச்சிலிருந்து சில பகுதிகள்:

பாஜக வென்றால்
2019 பொதுத் தேர்தலில் பாஜக வெல்லக் கூடாது என்பது முக்கியமானது. ஒரு வேளை பாஜக வென்றால், இந்திய அரசியல் சட்டத்தை அது தூக்கி எறிந்து விடும். இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறி விடும்.

ராஜ்யசபாவில் மெஜாரிட்டி
லோக்சபாவில் தற்போது மெஜாரிட்டியுடன் பாஜக உள்ளது. இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளிடம் உள்ளன. ராஜ்யசபாவில் மட்டும்தான் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை.

ராஜ்யசபாவிலும் சாதிப்பார்கள்
ஆனால் பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் அடுத்த 4 -5 ஆண்டுகளில் ராஜ்யசபாவிலும் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைத்து விடும்.அப்படி நடந்தால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறி விடும்.

அழித்து விடுவார்கள்
பாஜக மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு வென்றால் அரசியல் சாசனத்தை அழித்து விடுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். புதிய அரசியல் சாசனத்தை படைப்பார்கள். இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறும்.

இந்து ராஷ்டிரத்தை அமைப்பார்கள்
வீர சாவர்கர் போன்றோர் கண்ட இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்க முயல்வார்கள். அமைப்பார்கள். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் கடுமையாக போராடி வென்ற சமத்துவ சமூகத்தை அழித்து விடுவார்கள் என்றார் சசி தரூர்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications